செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்பனை - கோவை வருவாய் அலுவலரிடம் புகார்!

தடாகம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்கப்பட்டதாகத் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார்.


கோவை: அரசால் தடைசெய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து திருட்டுத்தனமாகச் செங்கற்கள் விற்கப்பட்டதாக கோவை வருவாய் அலுவலரிடம் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 177 செங்கல் சூளைகள், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், கனிமவள திருட்டு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக 433 கோடி ரூபாய் அபராதம் செலுத்த ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையான 433 கோடி ரூபாயைத் தவிர்த்து, 13.10 கோடி கட்டினாலே, அபராதம் கட்டி வேக வைத்த மற்றும் பச்சை செங்கற்களை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம் என ஆணை பிறப்பித்துள்ளார்.

செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆணையருக்கு எதிராக, தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தடாகம் இயற்கை பாதுகாப்பு உறுப்பினர் வழக்குத் தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையரின் உத்தரவைத் தடை செய்தும்,வருகின்ற 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும், செங்கல் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இப்படி செங்கல் எடுத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர். தடாகம் பாதுகாப்புக்குழுவினர், 1500 லாரிகளில் பச்சை மற்றும் வேக வைத்த செங்கற்கள் எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் மனுவில் கூறப்பட்டுள்ளது.



அதற்கான ஆதாரங்களை இணைத்து புகாராக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் இதுகுறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.

Newsletter

Coimbatore Police Museum to Offer Free Entry on September 6 for Police Day

The Tamil Nadu Police Museum in Coimbatore will offer free entry to the public and school and college students on Septem...

தாய்லாந்து சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில் கோவை சிறுவன் ரக்‌ஷனுக்கு 2-ம் இடம்

தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச ஜூனியர் மாடல் போட்டியில், இந்தியா சார்பில் தமிழகத்தில் இருந்து பங்கேற்ற ஒரே போட்டியாளராக ‌...

மோசடி வழிகளில் நடைபெறும் மதமாற்றத்தைத் தடுக்க சட்டம் தேவை: கோவையில் VHP பொதுச்செயலாளர் மிலிந்த் பரந்தே

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) சார்பில் நடைபெற்ற இலவச ஆம்புலன்ஸ் சேவை தொடக்க விழாவில் பங்கேற்ற மிலிந்த் பரந்தே, கோயி...

வாட்ஸ்-அப் மூலம் கேரளா லாட்டரி சூதாட்டம்: உக்கடத்தில் வாலிபர் கைது; 2 ஸ்மார்ட்போன்கள் பறிமுதல்

கோவை உக்கடம் புதிய பஸ் நிலைய கழிப்பறை அருகே வாட்ஸ்-அப் குழுக்கள் மூலம் கேரளா லாட்டரி எண்களை விற்பனை செய்து சட்டவிரோதமாக...

சித்தாபுதூரில் பணம் வைத்து சூதாட்டம்: 6 பேர் கைது; 159 சீட்டுகள், ரூ.3,700 பறிமுதல்

கோவை சித்தாபுதூர் என்.ஜி.என். தெருவில் பணம் வைத்து சட்டவிரோதமாக சீட்டாடியதாகக் கூறப்படும் 6 பேரை காட்டூர் போலீசார் கைது...

Park Institutions Students Gain Practical Cybersecurity Exposure

Park Institutions organised a seminar on Enterprise Vulnerability Management, providing 150 students from the Computer S...