செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்பனை - கோவை வருவாய் அலுவலரிடம் புகார்!

தடாகம் பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து செங்கற்கள் திருட்டுத்தனமாக விற்கப்பட்டதாகத் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் கோவை மாவட்ட வருவாய் அலுவலரிடம் புகார்.


கோவை: அரசால் தடைசெய்யப்பட்ட செங்கல் சூளையிலிருந்து திருட்டுத்தனமாகச் செங்கற்கள் விற்கப்பட்டதாக கோவை வருவாய் அலுவலரிடம் தடாகம் பள்ளத்தாக்கு பாதுகாப்பு குழுவினர் மனு அளித்தனர்.



அந்த மனுவில், கோவை தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் 177 செங்கல் சூளைகள், உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் ஒரு ஆண்டுக்கு மேலாக மூடப்பட்டுள்ளன. இந்த செங்கல் சூளை உரிமையாளர்கள், கனிமவள திருட்டு மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு இழப்பீடு ஏற்படுத்தியதாக 433 கோடி ரூபாய் அபராதம் செலுத்த ஆட்சியர் தலைமையிலான குழுவினர் நீதிமன்றத்திற்கு அறிக்கை அளித்து இருந்தனர்.

இந்நிலையில் கடந்த 29ஆம் தேதி புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையர் ஜெயகாந்தன், ஏற்கனவே விதிக்கப்பட்ட அபராத தொகையான 433 கோடி ரூபாயைத் தவிர்த்து, 13.10 கோடி கட்டினாலே, அபராதம் கட்டி வேக வைத்த மற்றும் பச்சை செங்கற்களை எடுத்து விற்பனை செய்து கொள்ளலாம் என ஆணை பிறப்பித்துள்ளார்.

செங்கல் சூளை உரிமையாளர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்ட ஆணையருக்கு எதிராக, தடை உத்தரவு பிறப்பிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் தடாகம் இயற்கை பாதுகாப்பு உறுப்பினர் வழக்குத் தொடுத்தார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் புவியியல் மற்றும் சுங்கத்துறை ஆணையரின் உத்தரவைத் தடை செய்தும்,வருகின்ற 19ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகவும், செங்கல் எடுக்கக்கூடாது என உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

இப்படி செங்கல் எடுத்து விற்பனை செய்யப்பட்டிருந்தால் அதுதொடர்பான விசாரணை நடத்தி மாவட்ட ஆட்சியர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டிருந்தனர். தடாகம் பாதுகாப்புக்குழுவினர், 1500 லாரிகளில் பச்சை மற்றும் வேக வைத்த செங்கற்கள் எடுத்துச்செல்லப்பட்டு விற்கப்பட்டதாகக் மனுவில் கூறப்பட்டுள்ளது.



அதற்கான ஆதாரங்களை இணைத்து புகாராக மாவட்ட வருவாய் அலுவலரிடம் கொடுத்தனர். மாவட்ட நிர்வாகம் செங்கல் சூளைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நீதிமன்றத்தில் இதுகுறித்த ஆவணங்களை சமர்ப்பிக்க இருப்பதாகத் தெரிவித்தனர்.

Newsletter

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...

கோயம்புத்தூர் மாநகராட்சி: பொதுமக்கள் பாதுகாப்புக்காக 13 தெருவோர பன்றிகள் பிடிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் பொதுமக்களுக்கு இடையூறாக உலவிய 13 பன்றிகள் தெற்கு மண்டலம் வார்டு 91ல் நேதாஜிபுரம் மற்றும் கு...