கோவை பூச்சியூரில் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை - இளைஞர் கைது

கோவை பூச்சியூரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 550 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறூவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் பெயர் விக்ரம் என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், தற்போது கோவை கவுண்டம்பாளையத்தில் தங்கியுள்ள அவர், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விக்ரமை கைது செய்த பெரியநாய்க்கன்பாளையம் போலீசார், அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான விக்ரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...