கோவை பூச்சியூரில் கஞ்சாவைப் பதுக்கி விற்பனை - இளைஞர் கைது

கோவை பூச்சியூரில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்துவந்த இளைஞரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 550 கிராம் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


கோவை: பெரியநாயக்கன்பாளையம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெறூவதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நரசிம்மநாயக்கன்பாளையத்தை அடுத்த பூச்சியூரில் பெரியநாயக்கன்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் முரளி தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, அங்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் நின்று கொண்டிருந்த இளைஞரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், அவர் பெயர் விக்ரம் என்பதும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

மேலும், தற்போது கோவை கவுண்டம்பாளையத்தில் தங்கியுள்ள அவர், கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.

விக்ரமை கைது செய்த பெரியநாய்க்கன்பாளையம் போலீசார், அவரிடமிருந்து 550 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர். பின்னர், கைதான விக்ரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி தேவைகளுக்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன் - எம்.எல்.ஏ கனிமொழி சந்தோஷ்

கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர் கனிமொழி சந்தோஷ், பதவியேற்புக்க...

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...