கோவை மதுக்கரை அருகே கிணற்றில் இருந்து விவசாயி சடலமாக மீட்பு - குடும்பத்தினர் சோகம்..!

மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (68) என்ற விவசாயி, அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் அருகேயுள்ள செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (68).

விவசாயியான இவர், கடந்த 6 மாதமாக மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், வெளியில் சென்றுவிட்டு, 2 அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த ரங்கசாமி திடீரென மாயமானதாக தெரிகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகன் வினோத் குமார் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என எண்ணி வினோத் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல வினோத்குமார் கிணற்றில் மோட்டார் போட சென்றுள்ளார்.

அப்போது ரங்கசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.



இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...