கோவை மதுக்கரை அருகே கிணற்றில் இருந்து விவசாயி சடலமாக மீட்பு - குடும்பத்தினர் சோகம்..!

மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் பகுதியை சேர்ந்த ரங்கசாமி (68) என்ற விவசாயி, அவருக்கு சொந்தமான விவசாய கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரை அடுத்த அரிசிபாளையம் அருகேயுள்ள செட்டியார் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ரங்கசாமி (68).

விவசாயியான இவர், கடந்த 6 மாதமாக மனக்குழப்பத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அவர், வெளியில் சென்றுவிட்டு, 2 அல்லது 3 நாட்கள் கழித்து வீட்டுக்கு வருவார் எனவும் தெரிகிறது.

இந்நிலையில் நேற்று காலை வீட்டில் இருந்த ரங்கசாமி திடீரென மாயமானதாக தெரிகிறது. இரவு நீண்ட நேரம் ஆகியும் வராததால் அவரது மகன் வினோத் குமார் பல்வேறு பகுதிகளில் தேடி பார்த்துள்ளார்.

ஆனால் எங்கும் கிடைக்காததால், மீண்டும் வீட்டிற்கு வந்து விடுவார் என எண்ணி வினோத் குமார் வீட்டிற்கு வந்துள்ளார். இந்நிலையில் காலை வழக்கம் போல வினோத்குமார் கிணற்றில் மோட்டார் போட சென்றுள்ளார்.

அப்போது ரங்கசாமி கிணற்றில் சடலமாக மிதந்தது தெரியவந்தது. இதையடுத்து வினோத்குமார் மதுக்கரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.



இதனடிப்படையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ரங்கசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவையில் ‘டெங்கு விழிப்புணர்வு வீதி’ நிகழ்ச்சி

கோவை மாநகராட்சி மத்திய மண்டலம் வார்டு எண்.67க்கு உட்பட்ட காந்திபுரம், நியூ சித்தாபுதூர் அன்னபூர்ணா லே-அவுட் பகுதியில் செ...

கோவையில் ரூ.86 லட்சத்தில் 43 மின்கல வாகனங்கள் மற்றும் தெரு நாய்களுக்கு வெறிநாய் தடுப்பூசி முகாம் தொடக்கம்

கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார், மாவட்ட ஆட்சித்தலைவர் பவ...

கூடலூர் நகராட்சியில் 27 வார்டுகளிலும் தீவிர டெங்கு கொசு ஒழிப்புப் பணி

கோவை கூடலூர் நகராட்சிக்குட்பட்ட 27 வார்டுகளிலும் டெங்கு காய்ச்சலைத் தடுக்க கொசு மற்றும் கொசுப்புழு ஒழிப்புப் பணிகள் தீவி...

கோவையில் வீட்டில் நகை பணம் இல்லாததால் பொருட்களை உடைத்துவிட்டு தப்பிய திருடன்

கோவை ராமநாதபுரத்தில் ஐ.டி நிறுவன ஊழியர் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் திருடச் சென்ற ஆசாமி, நகை பணம் எதுவும் கிடைக்காததால் ஆத்...

கோவை அசோகபுரம் ஆசிரியர் காலனி ரவுண்டானாவில் 6 அடி உயர வெண்கல திருவள்ளுவர் சிலை திறப்பு

கோவை அசோகபுரம் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட மேம்பாலத்தின் முடிவில் உள்ள ஆசிரியர் காலனி ரவுண்டானாவில், தனி...

Coimbatore Court Convicts Two Govt School Teachers in Forged Salary Certificate Loan Case

The CBI Special Court in Coimbatore has sentenced Krishnagiri government school teachers T. Vinothkumar and Nithilan to...