'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' - கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல 52 - வது, வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்க வேண்டும் என ஆணையர் பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதனை பொதுமக்களிடமும் வலியுறுத்த வேண்டுமென தூய்மை பணியாளர்களிடம் ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

Newsletter

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு ஆகிய மூன்று முக்கிய அணைகளின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேத...

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...