'மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்' - கோவை மாநகராட்சி ஆணையர் உத்தரவு

கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் உள்ள 52வது வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனியில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டல 52 - வது, வார்டுக்கு உட்பட்ட ஹட்கோ காலனி பகுதியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.



இந்த பணிகளை மாநகராட்சி ஆணையாளர் மு.பிரதாப் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அப்போது, கட்டுமான பணிகளை விரைவாகவும், தரமாகவும் கட்டி முடிக்க வேண்டும் என ஆணையர் பிரதாப் உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது கிழக்கு மண்டல தலைவர் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், கிழக்கு மண்டலம் உதவி ஆணையாளர் முத்துராமலிங்கம், வார்டு உறுப்பினர் அம்சவேணி, உதவி செயற்பொறியாளர் சுந்தரராஜன், சுகாதார அலுவலர் பரமசிவம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.



இதனைத் தொடர்ந்து, அதே பகுதியில் தெருக்களில் சேகரிக்கப்படும் குப்பைகள் முறையாக தரம் பிரித்து சேகரிக்கப்படுகிறதா? என்பது குறித்தும் மாநகராட்சி ஆணையர் ஆய்வு மேற்கொண்டார். இதனை பொதுமக்களிடமும் வலியுறுத்த வேண்டுமென தூய்மை பணியாளர்களிடம் ஆணையர் பிரதாப் அறிவுறுத்தினார்.

Newsletter

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...

சிங்காநல்லூர் தொகுதியில் MGR வேடத்தில் வாக்கு சேகரித்த AIADMK வேட்பாளர் கே ஆர். ஜெயராம்

சிங்காநல்லூர் தொகுதி AIADMK வேட்பாளர் K R Jayaram MGR வேடமனிந்து நந்தா நகர், திருக்குமரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வீதி...

செப்டம்பர் வரை பருத்தி இறக்குமதி வரி ரத்து செய்ய மத்திய அரசுக்கு ஜவுளி துறையினர் கோரிக்கை

பருத்தி விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில், தமிழக ஜவுளி தொழில்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. விவசாயிகளுக்கு பாதிப...