முதலமைச்சர் கோப்பை போட்டி - ஆன்லைனில் பதிவு செய்ய ஆட்சியர் அழைப்பு!

கோவையில் நடைபெறும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் வரும் 17ம் தேதி வரை இணையதளம் வாயிலாக பதிவு செய்யலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவித்துள்ளார்.


கோவை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக பங்கேற்கும் வகையில் 42 வகையான மாவட்ட அளவிலான போட்டிகளும், 8 வகையான மண்டல அளவிலான போட்டிகளும் என மொத்தம் 50 வகையான போட்டிகள் கோவையில் நடத்தப்பட உள்ளது.

இதில், மாவட்ட அளவிலான போட்டிகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களிலும், மாநில அளவிலான போட்டிகள் மே மாதமும் நடைபெற உள்ளது.

மாவட்ட அளவில், முதலமைச்சர் கோப்பைகான விளையாட்டு போட்டிகளில் கபடி, சிலம்பம், தடகளம், கூடைபந்து, இறகுப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், கையுந்துபந்து, மேசைபந்து உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் இடம்பெற்றுள்ளன.

பொதுப்பிரிவைச் சேர்ந்தவர் 15வயது முதல் 35 வயது வரையிலும், பள்ளி மாணவ மாணவியர்கள் 12 முதல் 19 வயது வரையிலும், அனைத்து கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் 17 முதல் 25 வயது வரையிலும் உள்ளவர்கள் இந்தப் போட்டிகளில் கலந்து கொள்ளலாம்.

மேலும், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு போட்டிகளில் பங்கேற்க வயது வரம்பு இல்லை. இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் என அனைவரும் போட்டியாளர்களாகக் கலந்துகொள்ளலாம்.

இது தொடர்பாகப் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள் இதற்கான பதிவுகளை www.sdat.tn.gov.in என்ற இணையதளம் மூலம் வரும் 17ம் தேதி வரை தங்களது பெயர்களைப் பதிவு செய்யலாம் எனத் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...