புகையில்லா 'போகி' - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

திருப்பூரில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மாசு ஏற்படுத்தும் வகையில் போகி தினத்தன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், நாளை முதல் நான்கு மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வரும்போது அவர்களிடம் எரிக்க வேண்டிய பொருட்களை கொடுத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய மாநகராட்சி ஆணையர், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்.

இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...