புகையில்லா 'போகி' - திருப்பூர் மாநகராட்சி ஆணையர் வேண்டுகோள்!

திருப்பூரில் சுற்றுச்சுழலை பாதுகாக்கும் வகையில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையாளர் கிராந்தி குமார் பாடி செய்தியாளர்களை சந்தித்தார்.



அப்போது பேசிய அவர், திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளில் உள்ள பொதுமக்கள் மாசு ஏற்படுத்தும் வகையில் போகி தினத்தன்று பழைய பொருட்களை எரிப்பதை தவிர்க்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

மேலும், நாளை முதல் நான்கு மண்டலங்களிலும் மாநகராட்சி ஊழியர்கள், வீடுகளுக்கு வரும்போது அவர்களிடம் எரிக்க வேண்டிய பொருட்களை கொடுத்து, புகையில்லா போகிப் பண்டிகை கொண்டாட முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் கிராந்திகுமார் பாடி வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டிய மாநகராட்சி ஆணையர், பொதுமக்கள் குப்பைகளை வழங்கும்போது மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகளை தரம் பிரித்து வழங்கி மாநகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும்.

இத்திட்டத்தினை திறம்பட செயல்படுத்த மாநகராட்சி ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...