பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டம் - நியாய விலைக்கடைகளில் கோவை ஆட்சியர் ஆய்வு

கோவையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி வரும் நியாயவிலைக்கடைகளில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், பொங்கல் பரிசாக அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000 ரொக்கத்துடன் ஒரு முழுக் கரும்பும் வழங்கப்படும் எனத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அதனடிப்படையில், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 10லட்சத்து 99 ஆயிரத்து163 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 1089 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் என மொத்தம் 11லட்சத்து 252 குடும்பங்களுக்குப் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்காகக் கோயம்புத்தூர் மாவட்டத்திற்கு ரூ. 11ஆயிரத்து 806 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக வீடுகள் தோறும் டோக்கன்கள் வழங்கப்பட்டு, குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக்கடைக்குச் சென்று சமூக இடைவெளியைக் கடைப்பிடித்துப் பொங்கல் பரிசு தொகுப்பினைப் பெற்றுக் கொள்ளலாம்.

அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கும், தங்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக் கடைகளில் மட்டுமே பொங்கல் பரிசு வழங்கப்படும். அதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் இன்று லிங்கசெட்டிவீதி, தெப்பக்குளம் வீதியில் உள்ள ஸ்ரீராம லிங்க சௌடேஸ்வரி கூட்டுறவு பண்டகம், அம்மா சிறு கூட்டுறவு சிறப்பு அங்காடி கடை ஆகிய நியாயவிலைக்கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் விலையில்லா வேட்டி சேலையும் வழங்கப்பட்டது.



இங்கு மாவட்ட ஆட்சியர் சமீரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். மேலும் பரிசுத்தொகுப்புகள் சரியாக வழங்கப்படுகிறதா எனவும், ரொக்கம் ரூ.1000 வழங்கப்படுகிறதா என்பதையும் பயனாளிகளிடம் கேட்டறிந்தார்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...