வாரிசு, துணிவு படங்களின் 4 நாட்கள் சிறப்பு காட்சிகள் ரத்து - தமிழ்நாடு அரசு கொடுத்த ட்விஸ்ட்!

பொங்கலுக்கு வெளியாகும் அஜித் நடித்த துணிவு, விஜய் நடித்த வாரிசு படங்களின் ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களில் அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி சிறப்பு காட்சிகள் ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களான நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாளை(11ஆம் தேதி) நள்ளிரவு 1மணி மற்றும் அதிகாலை 4 மணிக்கு ஒரே நாளில் வெளியாக உள்ளது. 9 ஆண்டுகளுக்கு பிறகு அஜித் மற்றும் விஜய் படங்கள் ஒரே நேரத்தில் திரைக்கு வருவதால் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகி உள்ளது.

இந்த படங்களை இருவரது ரசிகர்களும் போட்டி போட்டுக் கொண்டு முதல் நாளிலே பார்க்க தயாராகி வருகின்றனர். இதற்கான டிக்கெட் விற்பனையும், சனிக்கிழமை தொடங்கியது. குறிப்பாக இணையதள டிக்கெட் விற்பனை தொடங்கி சில மணி நேரங்களில் அஜித், விஜய் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் டிக்கெட்டை வாங்கினர்.

இந்நிலையில், ரசிகர்களுக்காக சிறப்பு காட்சிகள் திரையிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு காட்சிகளுக்காக டிக்கெட் அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஆயிரம் முதல் 2000 வரையில் டிக்கெட் விற்பனை செய்யப்பட்டதாக செய்திகள் வெளிவந்தன. இதனால் படம் ரீலிஸ் ஆவதையொட்டி சில முக்கிய வழிகாட்டுதல்களை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி ஜனவரி 13, 14, 15, 16 ஆகிய நான்கு நாட்களுக்கு துணிவு வாரிசு படங்களுக்கான அதிகாலை சிறப்பு காட்சிகளான 4 மணி மற்றும் 5 மணி ரத்து செய்யப்படுகிறது.

இந்த திரைப்படங்களுக்கான அதிகாலை காட்சிகளுக்கு மாவட்ட ஆட்சியர்கள், காவல் ஆணையர்கள் அனுமதி தரக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக பட குழு சார்பில் ஜனவரி 11ஆம் தேதி மட்டுமே சிறப்பு காட்சிகள் அறிவிக்கப்பட்டிருந்தன.

அந்த காட்சிகளை ரத்து செய்வதாக அரசு தெரிவிக்கவில்லை. மாறாக பொங்கல் பண்டிகையையொட்டி ஏதேனும் காட்சிகள் போடப்படுமா? என்ற கேள்விக்கு மட்டுமே தற்போது பதில் கிடைத்துள்ளது. மேலும் தியேட்டர்களில் பெரிய கட் டவுட்களை வைத்து பால் அபிஷேகம் செய்வதற்கு தடை விதிக்கப்படுகிறது.

மேலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக டிக்கெட் கட்டணம் வசூலிக்கக்கூடாது. டிக்கெட் பின்புறம் திரையரங்குகளின் ஏதேனும் பிரச்சனை தொடர்பான புகார் அளிக்க தியேட்டர் உயர் அதிகாரியின் பெயர், செல்போன் நம்பர், இமெயில் முகவரி அச்சிடப்பட்டிருக்க வேண்டும்.

திரையரங்குகளில் கூடுதல் விலைக்கு டிக்கெட் விட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். நிர்ணயிக்கப்பட்டதை விட பார்க்கிங் கட்டணம் அதிகமாக விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...