கோவை அருகே டிவைடரில் மோதி ஜவுளிக் கடைக்குள் புகுந்த டிப்பர் லாரி - ஓட்டுநர் படுகாயம்..!

கோவை அருகே தாமரைக்குளம் பகுதியில் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்த டிப்பர் லாரி, சாலை தடுப்பில் மோதி ஜவுளி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான நிலையில், படுகாயமடைந்த ஓட்டுநர் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்டு மருத்துவமனையில் அனுமதி.



கோவை: கோவை மாவட்டம் தாமரை குளம் பகுதியை சேர்ந்தவர் மணிமாறன். டிப்பர் லாரி உரிமையாளரான இவர், ஓட்டுநராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், பொள்ளாச்சியில் கட்டுமான பொருட்களை இறக்கிவிட்டு லாரியை கோவை நோக்கி ஓட்டி வந்துள்ளார்.

அப்போது, தாமரைக்குளம் அருகே வந்த போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, திடீரென சாலையின் நடுவே இருந்த தடுப்பில் மோதியதுடன், அருகே இருந்த ஜவுளி கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளானது.

அதிகாலை நேரம் என்பதால், ஜவுளி கடைக்குள் ஊழியர்கள் யாரும் இல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.



இதனிடையே விபத்துக்குள்ளான லாரியை கிரேன் மூலம் கடைக்குள் இருந்து வெளியே எடுக்க முயன்றனர்.

இதனிடையே விபத்துக்குள்ளான லாரியில் சிக்கிய மணிமாறன் உடலில் வலது பக்கத்தில் பலத்த காயமடைந்துள்ளார். இந்நிலையில், சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு அவரை மீட்ட பொதுமக்கள், ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...