நீலகிரி காட்டேரி அருகே காட்டு யானை விரட்டியதால் அலறியடித்து ஓடிய பொதுமக்கள் - பரபரப்பு..!

காட்டேரி அடுத்த பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற காட்டு யானை விரட்டியதால் அச்சமடைந்த பொதுமக்கள் அலறியடித்து ஓடிய நிலையில், வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்க வனத்துறை அறிவுறுத்தல்.



நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் கடந்த 20 நாட்களுக்கு மேலாக காட்டு யானை கூட்டம் ஒன்று முகாமிட்டுள்ளது. இந்த யானை கூட்டத்தை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட குன்னூர் வனத்துறையினர் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.



இந்த நிலையில் அந்த கூட்டம் வனப் பகுதிக்குள் செல்லாமல் தொடர்ந்து சாலை ஓரங்களிலும் தேயிலை தோட்டங்களிலும் சுற்றி திரிந்து வருகின்றன. குறிப்பாக குன்னூர் - மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலை பகுதிகளில் அடிக்கடி கடந்து சென்று வருகின்றன.



இந்த நிலையில் இன்று காலை யானை கூட்டம் காட்டேரி பழப்பண்ணை அருகே சாலையை கடக்க முயன்ற போது, சாலையில் இருந்த பொதுமக்களை ஆக்ரோஷமாக துரத்தியதால், அச்சமடைந்த பொதுமக்கள், அலறியடித்து ஓடியதால் பரபரப்பான சூழல் நிலவியது. பின்னர் யானைகள் தனது குட்டிகளுடன் வனப்பகுதிக்குள் சென்றன.



இந்த யானை கூட்டம் காட்டேரி, மரப்பாலம், டபுள் போஸ்ட்டு ஆகிய பகுதிகளில் உலா வருவதால் குடியிருப்பு மற்றும் சாலை பகுதிகளுக்கு வராமல் தடுக்கும் வகையில் வனத்துறையினர் ஆறு குழுக்களாக பிரிந்து அவற்றின் நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர்.

மேலும், பர்லியார் மலைப்பாதையில் வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கையுடன் வாகனங்களை இயக்க வேண்டும் என வனத்துறை சார்பாக அறிவுறுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...