கோவையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை சிட்கோ அருகே மருத்துவ தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள், தப்பிச்செல்ல முயன்ற நிலையில், பொதுமக்கள் பிடித்து போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிட்கோ ஸ்ரீ சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர் (57). மருத்துவரான இவர், கோவை கே.ஜி.சாவடி பகுதியில் மனைவியுடன் சேர்ந்து சிறிய கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கிளினிக் சென்று விட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அவரது வீட்டில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதை கண்டு இருவரும் சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருப்பூரை சேர்ந்த இம்ரான் (34), சத்தியமங்கலத்தை சேர்ந்த பரத்குமார் (35) என்பது தெரியவந்தது. மேலும், கூலி வேலை செய்து வந்த இருவரும், திட்டமிட்டு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

திருப்பூரில் பட்டப்பகலில் அடிதடி; ஒருவர் காயம் – போலீசார் விசாரணை

திருப்பூர் இந்திரா நகர் பகுதியில் ஒருவரை கும்பலாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பாக 15 வேலம்ப...

வெள்ளியங்கிரி மலை ஏற நாளை முதல் தடை

தென்மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை காரணமாக, கோவை வெள்ளியங்கிரி மலைக்கு மே 13 முதல் பக்தர்கள் செல்ல வனத்துறை தற்காலிக தடை...

“Unable to Breathe” – Chettipalayam Residents Petition Pollution Control Board Over Garbage Burning

Residents of Chettipalayam in Coimbatore have petitioned the Tamil Nadu Pollution Control Board, alleging severe health...

“குப்பை எரிப்பால் மூச்சு விடவே முடியவில்லை” – செட்டிபாளையம் பொதுமக்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்துக்கு மனு..!

கோவை செட்டிபாளையம் பகுதியில் காலி மனையில் குப்பைகள் தீ வைத்து எரிக்கப்படுவதால் எழும் நச்சுப் புகையால் கடும் அவதிப்படுவதா...

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...