கோவையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற இருவரை மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்..!

கோவை சிட்கோ அருகே மருத்துவ தம்பதியர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்ற மர்ம நபர்கள், தப்பிச்செல்ல முயன்ற நிலையில், பொதுமக்கள் பிடித்து போத்தனூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.



கோவை: கோவை மாவட்டம் சிட்கோ ஸ்ரீ சாய் நகர் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கவாசகர் (57). மருத்துவரான இவர், கோவை கே.ஜி.சாவடி பகுதியில் மனைவியுடன் சேர்ந்து சிறிய கிளினிக் ஒன்றை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல் கிளினிக் சென்று விட்டு இருவரும் வீடு திரும்பியுள்ளனர். அப்போது வீட்டுக்குள் செல்ல முயன்ற போது அவரது வீட்டில் இருந்து ஹெல்மெட் அணிந்த மர்ம நபர்கள் இருவர் வெளியே ஓடி வந்துள்ளனர்.

இதை கண்டு இருவரும் சத்தம் போட்டதால், அங்கிருந்த பொதுமக்கள் தப்பிச் செல்ல முயன்ற இருவரையும் மடக்கி பிடித்தனர். இதையடுத்து போத்தனூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரையும் பிடித்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பிடிபட்ட நபர்கள் திருப்பூரை சேர்ந்த இம்ரான் (34), சத்தியமங்கலத்தை சேர்ந்த பரத்குமார் (35) என்பது தெரியவந்தது. மேலும், கூலி வேலை செய்து வந்த இருவரும், திட்டமிட்டு மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து திருட முயன்றதும் தெரியவந்தது.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...