தமிழகத்தின் ஆட்சி, நிர்வாகத்தை முடக்க மத்திய அரசு முயற்சித்து வருவது -கி.வீரமணி


தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி 356 சட்டப்பிரிவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் செய்து வருவதாக திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி குற்றம்சாட்டியுள்ளார்.

திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணி கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் மகிழ்ச்சிக்குரியதாக இல்லை எனவும், தமிழகத்தின் ஆட்சி, நிர்வாகத்தை ஸ்தம்பித்து போகச்செய்ய மத்திய அரசு முயற்சித்து வருவதாகவும் தெரிவித்தார். தமிழகத்தில் நெருக்கடியான சூழல் உருவாகியுள்ள நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படமால் தடுப்பதும், அரசியலமைப்பு சட்டப்படி செயல்படுவதும் தான் ஆளுநர் வேலை என கூறிய அவர், சட்டமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை நிருபிக்க உத்தரவிடாமல் ஆளுநர் காலதாமதம் செய்வது ஜனநாயக விரோதம் என தெரிவித்தார். முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தின் ராஜினமாவை ஆளுநர் ஏற்றுக்கொண்ட பின்னர் அதனை அரசியலமைப்பு சட்டப்படி திரும்ப பெற வாய்ப்பில்லை எனவும், ஒ.பன்னீர்செல்வத்தை நிர்பந்தப்படுத்தி ராஜினமா கடிதத்தில் கையெழுத்து வாங்கியிருந்தால் அது தொடர்பாக ஆளுநரே விசாரணை நடத்தலாம் அல்லது சி பி ஐ விசாரணைக்கு உத்தரவிட ஆளுநருக்கு உரிமையுண்டு என தெரிவித்தார். 

ஆனால் பெரும்பான்மை உள்ளவர்களை நிருபிக்க சொல்லமால் ஆளுநர் தயக்கம் காட்ட என்ன காரணம்?  என கேள்வி எழுப்பிய அவர், ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க நேரிடையாக தமிழகத்தில் காலுன்ற முடியாத சூழலில் குழப்பத்தை ஏற்படுத்தி 356 சட்டப்பிரிவை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் பலமாக நடந்து வருவதாக தெரிவித்தார். மேலும் ஆளுநர் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் எண்ணத்தை நிறைவேற்றும் கருவியாக தமிழ்நாட்டை காவிமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், சட்டமன்ற உறுப்பினர்கள் பிணையகைதிகளாக அடைத்து வைத்திருப்பதாக எழுந்துள்ள புகாருக்கு ஆளுநரே பொறுப்பு எனவும் அவர் குற்றம்சாட்டினார். சசிகலா முதல்வராக பொறுப்பேற்க அரசியலமைப்பு சட்டப்படி எந்த தடையும் இல்லை எனவும், பா.ஜ.க.வினர் சசிகலா ஆதரவு, ஒ.பன்னீர்செல்வம் ஆதரவு என இரட்டை வேடம் போடுவதாகவும் அவர் தெரிவித்தார். தி.மு.க ஒ.பன்னீர்செல்வத்தை ஆதரிப்பதாக சொல்லவில்லை எனவும், தற்போதைய சூழலில் தி.மு.க ஆட்சியமைக்க வாய்ப்பில்லை எனவும் கி.வீரமணி தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...

கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவாக செந்தில்பாலாஜி பதவியேற்பு

தமிழகத்தின் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடரில் கோவை தெற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற...

தொண்டாமுத்தூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக எஸ்.பி.வேலுமணி பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் வெற்றி பெற்ற எஸ்.பி.வேலுமணி சட்டப்...

கோயமுத்தூரில் அணைகளின் நீர்மட்டம் உயர்வு: தொடர் மழை வரத்தால் நீர் வெளியேற்றம்

கோயமுத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் உள்ள முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு, அமராவதி மற்றும் திரு...

Udhayanidhi Stalin to Become Leader of Opposition After Being Elected DMK Legislature Party Leader

Udhayanidhi Stalin, DMK Youth Wing Secretary and MLA from the Chepauk–Thiruvallikeni constituency, has been elected Lead...