நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்துவர தடை

ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் பரவல் எதிரொலியாக, நீலகிரி மாவட்டத்திற்குள் வெளிமாநிலங்களில் இருந்து வளர்ப்பு பன்றிகளை எடுத்து வர மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கபடும் என கால்நடை பராமரிப்பு துறை எச்சரித்துள்ளது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து காட்டு பன்றிகள் இறந்து வருகின்றன.



உடற்கூறு ஆய்வில் ஆப்ரிக்கன் பன்றி காய்ச்சல் தொற்றினால் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து கண்காணிப்பு பணியை தீவிரபடுத்திய நிலையில், ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் வீரியம் குறையும் வரை வளர்ப்பு பன்றிகளை வெளி மாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்குள் கொண்டு வரவும் விற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

தடையை மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கால்நடை பராமரிப்புத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. முதுமலை புலிகள் காப்பகத்தை சுற்றி 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பன்றி வளர்ப்பு பண்ணைகளில் கால்நடை மருத்துவ குழு ஆய்வு மேற்கொண்டதில் எந்த பண்ணைகளிலும் ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் அறிகுறிகளோ நோய் தொடர்பான இறப்புகளோ எதுவும் இதுவரை இல்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் அந்த வளர்ப்பு பன்றி பண்ணைகளை சுற்றி வேலிகள் அமைத்து காட்டுப்பன்றிகள் பண்ணையில் நுழையாதவாறும், பண்ணையைச் சுற்றி பிளீச்சிங் பவுடர் தெளிக்கவும் கால்நடை பராமரிப்பு துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் சுதாகர் வேட்பு மனு தாக்கல்

வால்பாறை சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் குட்டி என்ற சுதாகர் ஏப்ரல் 7ஆம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்தார். ஆனைமலை...

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...