ஒப்பந்த செவிலியர்கள் பணி நீக்கத்தை கண்டித்து கோவையில் கருப்பு பட்டை அணிந்து பணி செய்த செவிலியர்கள்

கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து கோவையில் 200 க்கும் மேற்பட்ட எம்.ஆர்.பி செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணி செய்தனர்.


கோவை: கொரோனா தொற்று பரவலின் போது, மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் 3,200 செவிலியர்கள், அரசு மருத்துவமனைகளில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். கொரோனா அச்சுறுத்தல் நீடித்ததால் அரசின் கோரிக்கைக்கு இணங்க தொடர்ந்து செவிலியர்களை பணியாற்றி வந்தனர்.

இந்நிலையில் கடந்த ஜனவரி 1 ஆம் தேதியுடன் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்கள், பணி நீக்கம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதனை பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்த்த நிலையில் இரண்டு தினங்களாக ஒப்பந்த செவிலியர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.



இதன் தொடர்ச்சியாக, அவர்களுக்கு ஆதரவு தரும் விதமாக, செவிலியர்கள் பணி நீக்கத்தை எதிர்த்து தமிழ்நாடு எம்.ஆர்.பி செவிலியர் மேம்பாட்டு சங்கம் சார்பாக செவிலியர்கள் தமிழகம் முழுவதும் கருப்பு பட்டை அணிந்தபடி பணியில் ஈடுபட்டனர்.



இதன் ஒரு பகுதியாக கோவையில் உள்ள சுமார் 200 எம்.ஆர்.பி. செவிலியர்கள் கருப்பு பட்டை அணிந்தபடி பணிகளை மேற்கொண்டனர்.

Newsletter

கோவையில் 42,300 தெருநாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை

கோவை மாநகராட்சியில் மதிப்பிடப்பட்ட 1.11 லட்சம் தெருநாய்களில் 42,300 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது....

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையப் பராமரிப்பு: ஆகஸ்ட் 18-ல் 7 மணி நேர மின் தடை

பாப்பநாயக்கன்பாளையம் துணை மின்நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ல் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்...

குப்பேபாளையத்தில் நாளை (18.08.2026) மின்தடை அறிவிப்பு

குப்பேபாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 18-ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை குப்பேபா...

பாதசாரி மீது பைக் மோதல்: தலையில் பலத்த காயம், இளைஞர் மீது வழக்கு

கோவை தெலுங்குபாளையம் சாலையில் நடந்து சென்ற 55 வயது நாகராஜ் மீது கட்டுப்பாட்டை இழந்த பைக் மோதியதில் தலையில் பலத்த காயம்....

சரவணம்பட்டியில் லாரி டிரைவர் மர்ம மரணம் - போலீசார் தீவிர விசாரணை

கோவை சரவணம்பட்டி விநாயகாபுரம் இளங்கோ பள்ளி அருகே நிறுத்தப்பட்டிருந்த மினி லாரியில் டிரைவர் ராஜு (53) மர்மமான முறையில் உய...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...