திருப்பூர் அருகே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு - பொதுமக்கள் போராட்டம்

நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டிய தனியார் பள்ளியை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 440 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, விகாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம், கால்பந்து மைதானத்தை கட்டி வருகிறது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.



நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூலிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க கோரியும் நீர் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

Newsletter

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...