திருப்பூர் அருகே நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் திறப்பு - பொதுமக்கள் போராட்டம்

நஞ்சராயன் குளத்தின் நீர்வழி பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டிய தனியார் பள்ளியை கண்டித்து நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் திருப்பூர் மாவட்டம், கூலிப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் 440 ஏக்கர் பரப்பில் நஞ்சராயன் குளம் உள்ளது. இந்த குளத்தின் நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து, விகாஸ் வித்யாலயா பள்ளி நிர்வாகம், கால்பந்து மைதானத்தை கட்டி வருகிறது. இதற்கான திறப்பு விழா விரைவில் நடக்க உள்ளது.



நீர்வழிப்பாதையை ஆக்கிரமித்து கால்பந்து மைதானம் கட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நஞ்சராயன் குளம் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் கூலிப்பாளையம் நான்கு ரோடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பள்ளி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்ககோரி கோஷங்களை எழுப்பினர்.



நஞ்சராயன் குளத்தை பாதுகாக்க கோரியும் நீர் வழிபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கோரியும் தமிழக முதல்வரை சந்திக்க உள்ளதாக நஞ்சராயன்குளம் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஈசன் முருகசாமி தெரிவித்தார்.

Newsletter

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...

வேளாண் பேராசிரியர்களுக்கு TNAU-வில் மூன்று நாள் சிறப்புப் பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் திட்டமிடல் மற்றும் கண்காணிப்பு இயக்ககத்தில், வேளாண் இணை பேராசிரியர்களுக்கான மூன்ற...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

புதிய தலைமைச் செயலக திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: KMDK ஈஸ்வரன்

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடர்பாக நிலவும் அச்சத்தைப் போக்கி, முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த அரசு நடவடிக்கை...

பருத்தி இறக்குமதி வரியை நிரந்தரமாக நீக்க வேண்டும் - சிஸ்பா கோரிக்கை

கோவையில் நடைபெற்ற தென்னிந்திய நூற்பாலைகள் சங்கத்தின் (சிஸ்பா) 35வது ஆண்டு பொதுக்குழுக் கூட்டத்தில், பருத்தி மீதான 11 சதவ...