கோவை கிணத்துக்கடவு அருகே சொந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணன் கைது..!

கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் பகுதியில், தேங்காய் வியாபாரம் செய்து வந்த சகோதரர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த வடபுதூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரம்மாள். இவரது மகன்களானமகாலிங்கம் மற்றும் ஆறுச்சாமி ஆகிய இருவரும் அதே பகுதியில் தேங்காய் வியாபாரம் செய்து வருகின்றனர்

இந்த நிலையில், தேங்காய் வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் கடந்த சில நாட்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்றிரவு வடபுதூர் பேருந்து நிறுத்தம் அருகே சகோதரர்கள் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது. அப்போது, தம்பி ஆறுச்சாமி, அண்ணன் மகாலிங்கத்தை அடித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அண்ணன் மகாலிங்கம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆறுச்சாமியின் வயிற்றில் குத்தியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆறுச்சாமி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கிணத்துக்கடவு போலீசார், ஆறுச்சாமியின்உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு பிரதே பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், தம்பியை கத்தியால் குத்தி கொலை செய்தஅண்ணன் மகாலிங்கத்தை, கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

அண்ணனே சொந்த தம்பியை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...