முதல்வரிடம் மணிமேகலை விருது பெற்ற கோவை மாவட்ட மகளிர் சுய உதவி குழுவினருக்கு மாவட்ட ஆட்சியர் வாழ்த்து..!

கோவை மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார். விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.


கோவை: டிசம்பர் 29ஆம் தேதியன்று திருச்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் உதவிகள் வழங்கினார். மேலும் அந்நிகழ்வில் சிறப்பாக பணியாற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு மணிமேகலை விருது உட்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தை சார்ந்த சிறப்பாக செயல்பட்ட "ஆட்சி மகளிர் சுய உதவிக் குழுவினர்" மற்றும் "ஜான்சி ராணி மகளிர் சுய உதவிக் குழுவினர்" க்கு மணிமேகலை விருதினை முதல்வர் வழங்கினார்.



இந்நிலையில், விருது பெற்ற இரு மகளிர் சுய உதவிக் குழுவினரும் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர்.

விருது பெற்ற மகளிர் சுய உதவி குழுக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அவரது வாழ்த்துக்களை தெரிவித்து, மேலும் சிறப்பாக செயல்படும்படி வாழ்த்தி ஊக்குவித்தார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...