கோவையில் இருந்து புறப்பட்ட சார்ஜா விமானத்தில் பறவைகள் மோதி எஞ்சின் பழுது - விமான சேவை ரத்து

கோவை விமான நிலையத்தில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமான எஞ்சினில் பறவைகள் மோதி எஞ்சின் பழுதானதால், விமானம் உடனடியாக தரையிறக்கப்பட்டது.



கோவை: கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜா மற்றும் சிங்கப்பூர் நாடுகளுக்கு விமானங்கள் இயக்கபட்டு வருகின்றன. இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு கோவை விமான நிலையத்திலிருந்து சார்ஜாவுக்கு ஏர் அரேபிய விமானம் 164 பயணிகளுடன் புறப்பட தயாரானது. 

அப்போது விமானம் பறக்க துவங்கிய தருவாயில், விமானத்தில் இடது எஞ்சினில் பறவைகள் திடீரென மோதியதில் இன்ஜின் பிளேடில் பழுது ஏற்பட்டது. உடனடியாக விமான ஓட்டுநர், விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பத்திரமாக விமானத்தை, கோவை விமான நிலையத்தில் தரையிறக்கினார். பின்னர், விமானத்தில் இருந்த 164 பயணிகளும் பத்திரமாக வெளியில் அழைத்துவரப்பட்டனர். 

என்ஜினை பொறியாளர்கள் ஆய்வு செய்த போது, இறந்த நிலையில் ஒரு பறவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை அப்புறப்படுத்திய பொறியாளர்கள், எஞ்சினை மாற்றுவது குறித்து ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது மாற்று என்ஜின் வரும் வரை விமானத்தை இயக்க முடியாத சூழல் உள்ளதால், விமான சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை சர்வதேச விமான நிலையத்தில் காத்திருப்பு அறையில் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்த பயணிகள் அனைவரும், விமான நிலையம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சில பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்துள்ள நிலையில், மாற்று எஞ்சின் பொருத்தப்பட்டு பிறகே மீண்டும் ஏர் அரேபியா இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

என்ஜின் கோளாறு ஏற்பட்டவுடனே உடனடியாக விமானம் தரையிறக்கப்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...