கோத்தகிரியிலில் இருந்து கடத்தப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

கோத்தகிரியிலில் சரக்கு வாகனத்தில் மறைத்து கடத்திச் செல்லப்பட்ட 40 மூட்டை ரேஷன் அரிசியைக் குடிமைப் பொருட்கள் கடத்தல் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறைப் போலீசார் பறிமுதல் செய்ததுடன், சரக்கு வாகன டிரைவரையும் கைது செய்தனர்.



நீலகிரி: கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் சமவெளிப் பகுதிக்கு செல்லும் சாலை வழியாக ரேஷன் அரிசி கடத்திச் செல்வதாக நீலகிரி மாவட்ட குடிமைப் பொருட்கள் கடத்தல் குற்றப்பிரிவு புலனாய்வுத் துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மேனகா, சப் இன்ஸ்பெக்டர் அர்ஜுன் குமார், ஏட்டுக்கள் சுமதி, முருகேசன் மற்றும் ஜெகநாதன் ஆகியோர் கொண்ட குழுவினர், குஞ்சப்பனை சோதனைச் சாவடியில் நேற்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக சென்ற சந்தேகத்திற்கிடமான சரக்கு வாகனத்தைத் தடுத்து நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், அதில் ரேஷன் அரிசி 40 மூட்டைகளில் நிரப்பி, மறைத்து வைக்கப்பட்டு சமவெளிப்பகுதிக்கு கடத்திச் செல்வது கண்டுபிடிக்கப்பட்டது.



உடனடியாக டிரைவரை கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் விசாரித்ததில், சரக்கு வாகனத்தின் டிரைவர், ஊட்டி லவ்டேல் பகுதியைச் சேர்ந்த கிறிஸ்டின் ஜோசப் (வயது 48) என்பதும் கீழ் கோத்தகிரி, தூனேரி பகுதிகளில் இருந்து ரேஷன் அரிசியை வாங்கி சமவெளிப் பகுதிக்கு விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிய வந்தது.



இதையடுத்து, டிரைவரைக் கைது செய்த போலீசார், பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை ஊட்டியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

பின்னர் டிரைவர் ஜோசப் மீது வழக்குப் பதிவு செய்து, அவரை சிறையில் அடைத்தனர். கடத்தப்பட்ட ரேஷன் அரிசி எங்கிருந்து வாங்கப்பட்டது, யாருக்காக கொண்டுச் செல்லப்படுகிறது..? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...