கோவையில் லாட்டரி விற்ற முதியவர் கைது - லாட்டரி சீட்டுகள், ரூ. 37,500 பணம் பறிமுதல்

குனியமுத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்த மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்ற முதியவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 39,500 பணத்தை குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் விற்க, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம்,1979-ன் கீழ் 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளா லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, கேரளாவிற்கு மிக அருகில் கோவை மாவட்டம் உள்ளதால், தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாளையாரில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து கோவையில் விற்று வருகின்றனர்.

இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் முதியவர் ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

போத்தனூர் பகுதியைச் சார்ந்த 70 வயது முதியவரான கோவிந்தராஜ் என்பவர் குனியமுத்தூர் பகுதிகளில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இவரை, கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 166 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஒரு சீட்டு 40 ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமாக 6640 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அது மட்டுமின்றி, 39 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட முதியவர், மாற்றுத்திறனாளி என்பதனால் அவரை போலீசார் ஸ்டேஷன் பிணையில் விடுவித்தனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எசரித்துள்ளனர்.

Newsletter

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...