கோவையில் லாட்டரி விற்ற முதியவர் கைது - லாட்டரி சீட்டுகள், ரூ. 37,500 பணம் பறிமுதல்

குனியமுத்தூர் பகுதியில் லாட்டரி சீட்டுகளை விற்று வந்த மாற்றுத்திறனாளியான கோவிந்தராஜ் என்ற முதியவரிடம் இருந்து லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ. 39,500 பணத்தை குனியமுத்தூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.



கோவை: தமிழ்நாட்டு லாட்டரிச் சீட்டுக்கு மட்டுமல்லாமல், பிற மாநிலங்களுடைய லாட்டரிச் சீட்டுகளைத் விற்க, தமிழ்நாடு பரிசுத் திட்டங்கள் தடைச்சட்டம்,1979-ன் கீழ் 2003-ம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனை தடை செய்யப்பட்டது.

இருப்பினும், தமிழ்நாடு - கேரளா எல்லையோர மாவட்டங்களில் கேரளா லாட்டரி விற்பனை சட்ட விரோதமாக நடந்து வருகின்றன. குறிப்பாக, கேரளாவிற்கு மிக அருகில் கோவை மாவட்டம் உள்ளதால், தமிழ்நாடு - கேரளா எல்லையில் உள்ள வாளையாரில் இருந்து லாட்டரிகளை வாங்கி வந்து கோவையில் விற்று வருகின்றனர்.

இந்த நிலையில், குனியமுத்தூர் பகுதியில் தடை செய்யப்பட்ட லாட்டரிகள் விற்கப்படுவதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, குனியமுத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்ததில் முதியவர் ஒருவர் போலீசாரிடம் வசமாக சிக்கிக் கொண்டார்.

போத்தனூர் பகுதியைச் சார்ந்த 70 வயது முதியவரான கோவிந்தராஜ் என்பவர் குனியமுத்தூர் பகுதிகளில் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்று வந்துள்ளார். இவரை, கையும் களவுமாகப் பிடித்த போலீசார், அவரிடம் இருந்து 166 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

ஒரு சீட்டு 40 ரூபாய் மதிப்பீட்டில் மொத்தமாக 6640 ரூபாய் மதிப்பிலான லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அது மட்டுமின்றி, 39 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்க பணமும் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட முதியவர், மாற்றுத்திறனாளி என்பதனால் அவரை போலீசார் ஸ்டேஷன் பிணையில் விடுவித்தனர்.

தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்றால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எசரித்துள்ளனர்.

Newsletter

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...