சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ரூ.152 உயர்வு - 41,000-ஐ நெருங்குகிறது ஒரு சவரன் தங்கத்தின் விலை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.152 உயர்ந்து, சவரன் ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படும் நிலையில், தொடர்ந்து 40,000 ரூபாயை கடந்து தங்கம் விற்பனை செய்யப்படுவது வாடிக்கையாளர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை: சர்வதேச பொருளாதார சூழல், உலக சந்தையில் தங்கத்தின் மதிப்பு மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் தங்கத்தின் விலை கடந்த அக்டோபரில் 40 ஆயிரம் ரூபாயை கடந்த நிலையில், செப்டம்பர் மாதம் முதல் விலையில் அவ்வப்போது ஏற்ற இறக்கங்கள் இருந்து வருகிறது.

இதனிடையே இன்று சென்னையில் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.19 உயர்ந்து ரூ.5,105 விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி ஒரு சவரன் தங்கத்தின் விலை, ரூ.152 உயர்ந்து ரூ.40,840 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 40 காசுகள் அதிகரித்து ரூ.74.80 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு சவரன் தங்கத்தின் விலை தொடர்ந்து 40 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுவதால், இனிமேல் அதை வாங்க முடியுமா? என பலரும் அச்சம் கொள்ள தொடங்கியுள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...