வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் மோசடி - தாராபுரம் இளைஞர் கைது செய்து கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை

கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் வீடு கட்டித் தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்ட தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவரை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.


கோவை: திருப்பூர் மாவட்டர் தாராபுரம் மேட்டுக்காடு தோட்டம் பகுதியைச் சேர்ந்த உதயகுமார் (35). இவர், குறைந்த விலையில் வீடு கட்டி தருவதாக தனது யுடியூப் பக்கத்தில் பல்வேறு விளம்பரங்களை பதிவேற்றம் செய்துள்ளார்.

இந்த விளம்பரங்களை நம்பிய கோவை வெள்ளலூர் பகுதியை சேர்ந்த ஆஷா என்ற பெண் அவரை தொடர்பு கொண்டு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தில் வீடு கட்டித் தரும்படி கூறி, முன் பணமாக ஒரு குறிப்பிட்ட தொகையை உதயகுமாரின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, உதயகுமார் செட்டிபாளையத்தில் உள்ள ஆஷாவின் காலி இடத்தில் வீடு கட்டித் தருவதற்கான முதற்கட்ட வேலைகளை மட்டும் செய்துவிட்டு, வீட்டை கட்டி முடிக்காமல் ஏமாற்றி வந்துள்ளார்.

இது சம்மந்தமாக, பாதிக்கபட்ட பெண் கோவை மாவட்ட குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த போலீசார், மேற்கு மண்டல ஐ.ஜி சுதாகர் உத்தரவின் பேரில், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் புலன் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

விசாரணையில், தாராபுரத்தை சேர்ந்த உதயகுமார் என்பவர் பொள்ளாச்சி, கோமங்கலம் மற்றும் பல்வேறு பகுதிகளில் இதேபோல் வீடு கட்டி தருவதாக கூறி ரூ.40 லட்சம் வரை பண மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து, கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் உதயகுமாரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.

Newsletter

கோவை, திருப்பூர் மின்தடை பிரச்சனைக்கு தனி கவனம் தேவை - முதல்வருக்கு ‘காட்மா’ அமைப்பு கோரிக்கை

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நிலவிவரும்  மின்தடை காரணமாக தொழில்துறை கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ள ‘கா...

கோவை பீளமேடு 27-வது வார்டில் ரேஷன் கடை மற்றும் தூய்மைப் பணிகள் கவுன்சிலர் ஆய்வு

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 27-வது வார்டு பகுதிகளில் பல்வேறு மக்கள் ந...

Heavy Rain, Strong Winds Lash Thudiyalur and Surrounding Areas

Heavy rain accompanied by strong winds lashed Thudiyalur and several parts of Coimbatore’s northern outskirts for more t...

துடியலூர் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை

கோவை துடியலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த காற்றுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளி...

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் டெக் கார்டு லேப்ஸ் அறக்கட்டளை துவக்க விழா

Sri Ramakrishna Engineering College SREC Spark வளாகத்தில் Tech Card Labs Foundation துவக்க விழா நடைபெற்றது. இந்தியா-இஸ்ர...

கோவையில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்த ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர்

Coimbatore மாவட்ட ஆட்சியர் பவன் குமார் கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் M Sivaguru Prabhakaran ஆகியோர் மாநகராட்சி...