தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டி - வெண்கல பதக்கம் வென்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சைக்கிள் போலோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளையோர் பெண்களுக்கான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த சட்டீஸ்கர் மாநிலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.



அதேபோல், இரண்டாவதாக வந்த மேற்கு வங்க மாநிலம் வெள்ளி பதக்கத்தை வென்ற நிலையில், தமிழ்நாடு வெண்கல பதக்கத்தை வென்றது. இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பதக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...