தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டி - வெண்கல பதக்கம் வென்ற மாணவிகள் கோவை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து வாழ்த்து

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான சைக்கிள் போலோ போட்டியில் வெண்கலப்பதக்கம் வென்ற மாணவிகள், கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனை நேரில் சந்தித்து பதக்கத்தை காண்பித்து வாழ்த்து பெற்றனர்.


கோவை: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் சைக்கிள் போலோ பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவிலான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மகராஷ்டிரா, மத்திய பிரதேசம், உத்திரபிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தான், தமிழ்நாடு, கேரளா, சட்டீஸ்கர் மாநிலங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டிகள் 25ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் இளையோர் பெண்களுக்கான சைக்கிள் போலோ சாம்பியன்ஷிப் போட்டியில் முதலிடம் பிடித்த சட்டீஸ்கர் மாநிலம் தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது.



அதேபோல், இரண்டாவதாக வந்த மேற்கு வங்க மாநிலம் வெள்ளி பதக்கத்தை வென்ற நிலையில், தமிழ்நாடு வெண்கல பதக்கத்தை வென்றது. இந்நிலையில், போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகள், பதக்கத்தை கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

Newsletter

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...