பிரதமர் மோடியும், ஜே.பி.நட்டாவும் தமிழ்நாட்டின் மீது சிறப்பு கவனம் செலுத்துகின்றனர் - கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை

கோவை விமான நிலையத்தில் பேசிய அண்ணாமலை, நாடாளுமன்ற தேர்தல் பணிகளை பாஜக தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளது என்றும், தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் நட்டாவும் கூடுதல் கவனம் செலுத்துவதாகவும் தெரிவித்தார்.



கோவை: தமிழகத்தின் மீது பிரதமர் மோடியும், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவும் சிறப்பு கவனம் செலுத்தி வருவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கோவை விமான நிலையத்தில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை வழியனுப்ப வந்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்த போது, பேசியதாவது, மேட்டுப்பாளையம் பொதுக் கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் நட்டா பேசியது பாஜகவினரிடையே புதிய உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நீலகிரி தொகுதியில் பாஜக வேட்பாளர்கள் வெற்றி வேட்பாளர்களாக வருவார்கள் என்ற நம்பிக்கையுடன் நேற்றைய விழா நடந்து முடிந்தது. அதை தொடர்ந்து பாஜக தேசிய தலைவர் நட்டா, அன்னூரில் உள்ள இணை தலைவர் வீட்டிற்கு சென்ற பின், இரவு கோவையில் தங்கினார்.

தற்போது இங்கிருந்து ஒடிசா செல்கிறார். எப்போது தேசிய தலைவர் வந்தாலும் தொண்டர்களுக்கு உத்வேகம் தான், தேசிய தலைவர் தமிழகத்திற்கு வருவது புதிது கிடையாது. கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வந்து சென்றார். மீண்டும் வந்துள்ளார்.

தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடியும் பாஜக தேசிய தலைவர் நட்டாவும் சிறப்பு கவனத்தை செலுத்தி வருகிறார்கள். குறிப்பாக நாடாளுமன்ற தேர்தல் கூட்டத்தை கூட தமிழகத்தில் இருந்து தான் துவக்கியுள்ளனர்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கள்ளிமடை துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை

கள்ளிமடை துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். இதனால் காமராஜ்...

சோமையம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (14.08.2026) மின்தடை அறிவிப்பு

சோமையம்பாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக ஆகஸ்ட் 14ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வர...

கோவை பீளமேடு வார்டு 27-ல் அங்கன்வாடி மையம், தூய்மைப் பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேட்டில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் அங்கன்வாடி மையம், சாலையோர தூய்மை, குப்பை அகற...

ராகுல் காந்தி தான் 2029 பிரதமர் வேட்பாளர்; தவெகவும் ஏற்றுக்கொள்ளும்: கோவையில் அமைச்சர் ராஜேஷ்குமார்

கோவையில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் பேசிய அமைச்சர் ராஜேஷ்குமார், தமிழகத்தில் சுற்றுலாத்துறையை வேகமாக வளர்க்க ப...

ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் தேசியக் கொடி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர்

கோயம்புத்தூரில் MY Bharat திட்டத்தின் கீழ் ஸ்ரீ ராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் 'ஹர் கர் திரங்கா' விழிப்புணர...

கோவை கல்லூரி மாணவர் கொலை: மேலும் ஒரு மாணவர் கைது; 6 பேருக்கு போலீஸ் வலை

கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கில் ஏற்கனவே 5 மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு மாணவரை போலீசார் க...