கோவை தனியார் நிறுவனத்திடம் நண்டு உரம் வாங்கி ரூ.82 லட்சம் மோசடி - பஞ்சாப் விரைந்த கோவை குற்றப்பிரிவு போலீசார் - ஒருவர் கைது….!

இருகூர் பகுதியில் உள்ள நண்டு ஓடுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.82 லட்சம் மதிப்பிலான உரங்களை வாங்கி ஏமாற்றிய பஞ்சாப்பை சேர்ந்த இருவரை போலீசார் தேடிவந்த நிலையில், ஒருவர் பஞ்சாப் மாநிலம் பட்டியாலாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.



கோவை: கோவை மாவட்டம் இருகூர் அடுத்த அத்தப்பகவுண்டன்புதுரை சேர்ந்தவர் விக்ரம் சுதாகர் (45). இவர் நண்டு ஓடுகளை பயன்படுத்தி இயற்கை உரம் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்நிறுவனம் மூலம் தயாரிக்கப்படும் உரங்களை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார்.

இந்த நிலையில், விக்ரம் சுதாகருக்கு பஞ்சாப் மாநிலத்தில் இருக்கும் அவரது நண்பரான திருநாவுக்கரசு மூலம் பட்டியாலாவை சேர்ந்த கரம்வீர் செர்கில் (25), பங்கஜ் மித்தல் (25) என்ற இருவரும் அறிமுகமாகியுள்ளனர்.

இவர்கள், பிரதர் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், தாங்கள் நண்டு உரம் வாங்கிக் கொள்வதாகவும் சுதாகரிடம் தெரிவித்துள்ளனர். அதன்படி, இரு தரப்பினரும் உரம் விற்பனை தொடர்பாக ஒப்பந்தம் செய்து கொண்டனர்.

இதையடுத்து, கடந்த 2020 ஆம் ஆண்டு பட்டியாலாவுக்கு ரூ.82 லட்சம் மதிப்பிலான இயற்கை நண்டு உரத்தை விக்ரம் சுதாகர் அனுப்பி வைத்துள்ளார். ஆனால், அதற்கான தொகையை பட்டியாலா நிறுவனத்தினர் தராமல் தொடர்ந்து காலம் தாழ்த்த வந்துள்ளனர்.

இது குறித்து, பலமுறை கேட்டும் பணம் கிடைக்காத நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் சுதாகர் புகார் அளித்தார்.

வழக்கு தொடர்பாக, உதவி ஆணையாளர் பார்த்திபன் மேற்பார்வையில், ஆய்வாளர் ரேணுகாதேவி, உதவி ஆய்வாளர் நாகராஜ் மற்றும் போலீசார் விசாரணை மேற்கொண்டதில், உரத்தை வாங்கிக்கொண்டு பணத்தை தராமல் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, விசாரணைக்காக கோவை போலீசார் பஞ்சாப் மாநிலம் சென்றனர். அங்கு, உரம் வாங்கி மோசடி செய்த பங்கஜ் மித்தலை பட்டியாலா போலீசார் உதவியுடன் கைது செய்தனர். தற்போது, அவரை கோவை அழைத்து வந்துள்ள போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும், அவர்கள் வாங்கிய ரூ.82 லட்சம் மதிப்பிலான நண்டு உரத்தை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் உள்ள ஒரு குடோனில் பதுக்கி வைத்திருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.

மோசடி செய்த மற்றொரு நபரான கரம் பீர் செர்கில் தலைமறைவாக உள்ள நிலையில், உரம் வாங்கி ரூ. 82 லட்சம் மோசடி தொடர்பாக தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...