கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி

கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் நடைபெற்ற மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சியின் 14வது நாளில், ஆயுத அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.



கோவை: தமிழகம் முழுவதும் ஆயுதப்படை காவலர்களுக்கான வருடாந்திர நினைவூட்டல் பயிற்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. 45 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் அணிவகுப்பு, உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் நடைபெறுவது வழக்கம்.



இந்நிலையில் இந்த ஆண்டு கோவை மாநகர ஆயுதப்படை காவலர்களுக்கான நினைவூட்டல் பயிற்சி கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.



இதன் ஒரு பகுதியாக 14 ஆவது நாள் பயிற்சி இன்று காலை நடைபெற்றது.



இதில் ஆயுத அணிவகுப்பு, போராட்ட களங்களில் செய்யும் பணிகளின் ஒத்திகை போன்ற பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியின் ஆண் மற்றும் பெண் என இருபாலர் காவலர்களும் கலந்து கொண்டு பயிற்சியில் ஈடுபட்டனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...