திருப்பூரில் 10 க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் - துரத்தி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்: நிம்மதி அடைந்த மக்கள்..!

திருப்பூர் மாநகராட்சியில் 44 மற்றும் 45 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த தெரு நாய்களை மாநகராட்சி அலுவலர்கள் 3 மணி நேரமாக துரத்தி பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 மற்றும் 45 வது வார்டு பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் சென்ற 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவில் 10 க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறிய செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், அச்சத்தில் இன்று காலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்கும் சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் பேரில், 44 மற்றும் 45 வது வார்டில் பொதுமக்களை கடித்த நாய்களை இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 மணி நேரமாக போராடி பிடித்துச் சென்றனர்.



இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை பன்மடங்கு அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை அதிமுக வேட்பாளர்கள் அண்ணாமலையுடன் சந்திப்பு; வெற்றிக்கு வாழ்த்து தெரிவிப்பு

சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிடும் கோவை தெற்கு மற்றும் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக வேட்பா...

கோவை விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

கோவையில் திமுக வேட்பாளர் அறிமுக பிரச்சாரத்தில் பங்கேற்க வந்த முதலமைச்சர் ஸ்டாலினை விமான நிலையத்தில் கட்சித் தலைவர்களும்...

முதலமைச்சர் இன்று கோவைக்கு வருகை; செந்தில் பாலாஜி ஏற்பாடுகளை ஆய்வு செய்தார்

தமிழக முதலமைச்சர் M.K. Stalin இன்று கோவையில் நடைபெறும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். Avinashi சாலையில்...

பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கம்

சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம், ஏப்ரல் 1 முதல் மே 31 வரை பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே Podanur வழியாக புதன், வியாழன், வெ...

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...