திருப்பூரில் 10 க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் - துரத்தி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்: நிம்மதி அடைந்த மக்கள்..!

திருப்பூர் மாநகராட்சியில் 44 மற்றும் 45 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த தெரு நாய்களை மாநகராட்சி அலுவலர்கள் 3 மணி நேரமாக துரத்தி பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 மற்றும் 45 வது வார்டு பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் சென்ற 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவில் 10 க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறிய செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், அச்சத்தில் இன்று காலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்கும் சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் பேரில், 44 மற்றும் 45 வது வார்டில் பொதுமக்களை கடித்த நாய்களை இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 மணி நேரமாக போராடி பிடித்துச் சென்றனர்.



இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை பன்மடங்கு அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - மாநகராட்சி ஆணையாளர் அறிவிப்பு

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் காலை 11 மணி...

கோவை மாநகராட்சியில் 700 சமூக நாய்களுக்கு வெறிநோய் தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களில் நடைபெற்ற சிறப்பு தடுப்பூசி முகாமில் 700 சமூக நாய்களுக்க...