திருப்பூரில் 10 க்கும் மேற்பட்டோரை கடித்த தெரு நாய்கள் - துரத்தி பிடித்த மாநகராட்சி ஊழியர்கள்: நிம்மதி அடைந்த மக்கள்..!

திருப்பூர் மாநகராட்சியில் 44 மற்றும் 45 வார்டுக்குட்பட்ட பகுதிகளில் 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை கடித்த தெரு நாய்களை மாநகராட்சி அலுவலர்கள் 3 மணி நேரமாக துரத்தி பிடித்து சென்றதால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தெரு நாய்கள் அதிகமாக சுற்றித் திரிவதால் பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

இந்நிலையில் மாநகராட்சிக்கு உட்பட்ட 44 மற்றும் 45 வது வார்டு பகுதிகளில் இரவு நேரத்தில் சாலையில் சென்ற 10 க்கும் மேற்பட்ட பொதுமக்களை தெரு நாய்கள் கடித்துள்ளது. இதில் படுகாயம் அடைந்தவர்கள் திருப்பூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இரவில் 10 க்கும் மேற்பட்டவர்களை தெரு நாய்கள் கடித்து குதறிய செய்தியை கேட்ட அப்பகுதி மக்கள், அச்சத்தில் இன்று காலை முதல் வீட்டை விட்டு வெளியில் வரவே தயங்கும் சூழல் நிலவி வருகிறது.



இந்நிலையில் இதுகுறித்து பொதுமக்கள் மாநகராட்சி நிர்வாகத்திற்கு அளித்த புகாரின் பேரில், 44 மற்றும் 45 வது வார்டில் பொதுமக்களை கடித்த நாய்களை இன்று காலையில் மாநகராட்சி ஊழியர்கள் 3 மணி நேரமாக போராடி பிடித்துச் சென்றனர்.



இதன் காரணமாக அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

மேலும், இதேபோல், திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு குடியிருப்பு மற்றும் பிரதான சாலைகளில் இரவு நேரங்களில் தெரு நாய்கள் தொல்லை பன்மடங்கு அதிகரித்து வருவதால், தெரு நாய்களை பிடித்து பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...