திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் வைக்கப்பட்ட ‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனரால் பரபரப்பு

திருப்பூரில் உள்ள பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்துள்ளதாக கூறப்படும் சூழலில் வேலைக்கு ஆள் தேவை என ஹிந்தியில் வைக்கப்பட்டுள்ள இந்த பேனரால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் ரயில் நிலையம் முன்பு ஹிந்தியில் அச்சடிக்கப்பட்ட‘வேலைக்கு ஆட்கள் தேவை’ பேனர் வைக்கப்பட்டுள்ளதால், தமிழக பணியாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு மற்றும் நடுத்தர அளவிலான ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பின்னலாடை நிறுவனங்களில் ஆர்டர்கள் குறைந்து வேலை இல்லை என பரவலாக கூறப்பட்டு வருகின்றன.



இந்நிலையில் திருப்பூர் ரயில் நிலையம் முன்பு வேலைக்கு ஆட்கள் வேண்டும் என ஹிந்தி மொழியில் பேனர் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. ஹிந்தி மொழியில் மட்டும் அச்சடிக்கப்பட்டுள்ள அந்த பேனரில் வேலைக்கு ஆள் வேண்டும் என்றும், நூற்பாலை, டையிங், காம்பேக்டிங், எம்பிராய்டரி, கோழி பண்ணை, ஹோட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கு ஆட்கள் தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பத்தாயிரம் ரூபாய் முதல் 20 ஆயிரம் வரையிலும் ஊதியம் வழங்கப்படும் என தொடர்பு எண்ணுடன் பெரிய அளவில் விளம்பர பேனர் வைக்கப்பட்டுள்ளது.

ஹிந்தி மொழியில் மட்டுமே இந்த பேனர் அச்சடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளதால், தமிழக தொழிலாளர்கள் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

Newsletter

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...

உடுமலை தொகுதியில் அதிமுக வேட்பாளராக கே ராதாகிருஷ்ணன் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் உடுமலை கே ராதாகிருஷ்ணன் போட்டியிடுவ...

பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை சோதனைக்கு இன்று ஓட்டம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேரின் உறுதித்தன்மை குறித்து பொதுப்பணித்துறை சந்தேகம் தெரிவித்ததை அடுத்து, ஹிந்து அமைப்பி...