உருமாறிய கொரோனா எதிரொலி: கோவை விமான நிலையத்தில் கண்காணிப்பு மையம் துவக்கம்

நாளை முதல் கண்காணிப்பு நெறிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று முதலே கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.



கோவை: சீனாவில் உருமாறிய புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து, இந்தியாவில் பரவலைத் தடுக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர். அதன்படி, அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக சமீபத்தில் மத்திய சுகதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அதில், இந்தியா வரும் சர்வதேச விமான பயணிகள் அனைவரும் முறையாக தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும், முககவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்ற வேண்டும் போன்ற நெறிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் நுழைவாயில்களில் பயணிகளுக்கு தெர்மல் ஸ்கிரீனிங் செய்ய வேண்டும் என்றும் 2% சதவீத பயணிகளுக்கு ரேண்டம் முறையில் கொரோனா பரிசோதனை செய்யவும் வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளன.



அதன்படி, கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் கண்காணிப்பு மற்றும் பரிசோதனை செய்யும் மையம் இன்று முதல் துவக்கப்பட்டுள்ளது. கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு காலை ஏர் அரேபியா மற்றும் மாலை சிங்கப்பூர் விமானம் என இரண்டு சர்வதேச விமானங்கள் இயக்கப்படுகிறது.



நாளை 24 ஆம் தேதி முதல் கண்காணிப்பு நெறிமுறைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வர மத்திய அரசு அறிவுறுத்திய நிலையில், இன்று முதலே கோவை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளை கண்காணிக்கும் பணி துவங்கியது.



அதன்படி, ஏர் அரேபியா விமானம் மூலம் வந்த பயணிகள் தெர்மல் ஸ்க்ரீனிங் மூலம் உடல் வெப்பம் பரிசோதிக்கப்பட்டது. மேலும், விமான நிலையம் வரும் அனைத்து பயணிகளும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச விமான நிலையம் வந்தடையும் பயணிகளுக்கு 2 சதவீதம் ரேண்டம் (random testing) அடிப்படையில், கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படும் எனவும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...