கோவையில் கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான ரூ.6 கோடி மதிப்பிலான கட்டிடம் மீட்பு - இந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை

கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான 4500 அடி பரப்பிலான வணிக கட்டிடத்தை நீதிமன்ற உத்தரவின்படி இந்து சமய அறநிலையத் துறையினர் மீட்டுள்ளனர்.



கோவை: கோவை கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான ரூ.6 கோடி மதிப்புள்ள வணிக கட்டிடத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் இன்று மீட்டனர்.



கோவை தெற்கு தாலுகா எல்லைக்குட்பட்ட, கோட்டைமேடு பகுதியிலுள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்குச் சொந்தமான வணிக கட்டடம், நீண்ட நாட்கள் தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து வந்தது.



கட்டிடத்தை மீட்க நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கோவை மண்டல இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் கருணாநிதி தலைமையிலான அதிகாரிகள் இன்று கோவிலுக்கு சொந்தமான 4,500 சதுர அடி பரப்புள்ள வணிக கட்டிடத்தை மீட்டனர்.

இது குறித்து, தெரிவித்த அறநிலையத் துறை அதிகாரிகள், இந்த கோவிலுக்கு சொந்தமான வணிக கட்டிடம், நீண்ட நாட்களாக குத்தகைதாரர் அல்லாமல் மூன்றாம் நபரின் ஆக்கிரமிப்பில் இருந்தது கண்டறியப்பட்டது.



இதையடுத்து, நீதிமன்ற உத்தரவுக்குப்பின், அந்த வணிக கட்டடம் கோவிலின் கட்டுப்பாட்டுக்கு இன்று கொண்டு வரப்பட்டது. மீட்கப்பட்டுள்ள இந்த வணிக கட்டடத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூபாய் 6 கோடி, என்றனர்.

இந்த நிலையில், கரிவரதராஜ பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தை தனியாரிடம் இருந்து மீட்ட இந்து சமய அறநிலையத் துறையிருக்கு கோவில் நிர்வாகத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Newsletter

GKNM மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம்: விருதுகள் வழங்கி கௌரவிப்பு

GKNM மருத்துவமனையில் மே 15 அன்று சர்வதேச செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது. செவிலியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் தொழில்சார்...

கிணத்துக்கடவு அருகே கொலை வழக்கில் சிறுவனுக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை..!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே நடைபெற்ற கொலை வழக்கை விசாரித்த இளஞ்சிறார் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட சிறுவனுக்கு...

AIADMK முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் A. சண்முகம் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்

கோவை புறநகர் தெற்கு மாவட்டம் மதுக்கரை ஒன்றிய AIADMK செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை A. சண்முகம் அமைச்சர்...

கோவையில் கனமழை: பாரதியார் பல்கலைக்கழகத்தில் ராட்சத மரங்கள் சாய்வு; எம்.பி.ஏ கட்டிடம் சேதம்

நேற்று பெய்த பலத்த மழை மற்றும் சூறாவளி காற்றால் பாரதியார் பல்கலைக்கழக வளாகத்தில் ஐந்து இடங்களில் ராட்சத மரங்கள் வேரோடு ச...

கோவையில் ஐஎஸ்ஐ முத்திரையில்லா ஹெல்மெட்டுகள் பறிமுதல்: கடை உரிமையாளர் மீது வழக்கு

கோவையில் தரமற்ற மற்றும் ஐஎஸ்ஐ முத்திரையில்லாத ஹெல்மெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதை தொடர்ந்து, இந்திய தர நிர்ணய அமைவனம் (B...

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் மதுபான இருப்பு கணக்கெடுப்பு தொடக்கம்

கோவை மாவட்டத்தில் மூடப்பட்ட 69 டாஸ்மாக் கடைகளில் இருப்பில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான மதுபானங்களை கணக்கெடுக்கும் பணி...