கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி டிவி, ரூ.47,000 பணம் பறித்த காவலர் உட்பட இருவர் கைது..!

சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் மசக்காளிபாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் (26), இவர் டிவி மற்றும் கேஸ் அடுப்பு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன் தினம், அவர் தனது நண்பரான சாரூக் என்பவருடன் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் டிவி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் என்பவர் தாசிமை போலியான டிவியை விற்பனை செய்கிறாயா? என மிரட்டி அவரிடமிருந்த டிவியை வாங்கியுள்ளார்.

மேலும் அவருடன் இருந்த சாரூக்கின் கைகளை கட்டி, அவரை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்று, அங்கிருந்த 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாசிம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவலர் ஒருவரே வியாபாரியை மிரட்டி டிவி, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...