கோவை சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி டிவி, ரூ.47,000 பணம் பறித்த காவலர் உட்பட இருவர் கைது..!

சிங்காநல்லூர் அருகே வியாபாரியை மிரட்டி 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை.


கோவை: கோவை மாவட்டம் மசக்காளிபாளையம் கம்பன் நகரை சேர்ந்தவர் தாசிம் (26), இவர் டிவி மற்றும் கேஸ் அடுப்பு விற்பனை செய்து வருகிறார். நேற்று முன் தினம், அவர் தனது நண்பரான சாரூக் என்பவருடன் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் டிவி விற்பனை செய்து கொண்டு இருந்துள்ளார்.

அப்போது அங்கு வந்த சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் என்பவர் தாசிமை போலியான டிவியை விற்பனை செய்கிறாயா? என மிரட்டி அவரிடமிருந்த டிவியை வாங்கியுள்ளார்.

மேலும் அவருடன் இருந்த சாரூக்கின் கைகளை கட்டி, அவரை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள வீட்டிற்கு காரில் அழைத்துச் சென்று, அங்கிருந்த 5 டிவிகள், கேஸ் அடுப்பு மற்றும் ரூ.47,000 பணத்தை பறித்து சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாசிம் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த போலீசார் சூலூர் காவல் நிலைய காவலர் முருகன் மற்றும் அவரது நண்பர் பிரதீஷ் ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

வேலியே பயிரை மேய்ந்த கதையாக காவலர் ஒருவரே வியாபாரியை மிரட்டி டிவி, பணம் உள்ளிட்ட பொருட்களை பறித்துச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...

மீலாதுன் நபி விழாவையொட்டி கோவையில் நாளை அனைத்து மதுபான கடைகளும் மூடல்-ஆட்சியர் அறிவிப்பு

மீலாதுன் நபி விழாவையொட்டி நாளை (26.08.2026) Dry Day அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான ம...

கோவை கவுண்டம்பாளையத்தில் "மறு நெசவு" திட்டம் - புதன்கிழமை தோறும் துணிக் கழிவு சேகரிப்பு

கோவை மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு 33-ல் "மறு நெசவு" திட்டத்தின் கீழ் துணிக் கழிவு சேகரிப்பு தொடங்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட்...

கோவை பீளமேட்டில் குடிநீர் குழாய் பழுது உள்ளிட்ட பல்வேறு பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் சாக்கடை சுத்தம், குடிநீர் குழாய் பழுது, மழைநீர்...

கோவை மாநகராட்சி ஆணையர் வாகன நிறுத்துமிடம் மற்றும் குடிநீர் பணிகளை ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, ஆர்.எஸ்.புரம் பல்நிலை வாகன நிறுத்துமிடம் மற்றும் மத்திய மண்டல பகுதிகளில்...

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...