ஜவுளி தொழில் வளர்ச்சி மானிய திட்ட உச்சவரம்பை ரூ.1 கோடியாக குறைக்க வேண்டும் - பொள்ளாச்சி எம்.பி. கோரிக்கை

மத்திய அரசு அமல்படுத்த உள்ள ஜவுளி தொழில் வளர்ச்சிக்கான மானிய திட்டத்தில் ரூ.10 கோடியாக இருக்கும் உச்சவரம்பை ரூ.1 கோடியாக குறைக்க வலியுறுத்தி சிறு, குறு, நடுத்தர தொழில் துறை செயலரிடம் பொள்ளாச்சி எம்.பி சண்முகசுந்தரம் கோரிக்கை மனு.


கோவை: விவசாயத்துக்கு அடுத்து அதிக மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி வருகிறது ஜவுளித்தொழில். நாடு முழுவதும் 110 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

ஜவுளி தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு உற்பத்தி சார்ந்த முதலீடு திட்டம் (பிஎல்ஐ 2.0) மத்திய அரசு விரைவில் அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான உச்ச வரம்பை குறைக்க வேண்டும் என மத்திய அரசின் எம்எஸ்எம்இ செயலர் ஸ்வைனிடம், பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சண்முகசுந்தரம் நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார்.

அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ஜவுளி தொழில் வளர்ச்சிக்கு விரைவில் அமல்படுத்தப்பட உள்ள உற்பத்தி சார்ந்த முதலீட்டு மானிய திட்டத்தில், ரூ.10 கோடி முதல் ரூ.100 கோடி வரை முதலீடு கொண்ட நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 90 சதவீத எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.10 கோடி முதலீடு செய்யும் நிதிநிலை வசதி இல்லை. குறைந்தபட்சம் ரூ.1 கோடி முதல் அதிகபட்சமாக ரூ.10 கோடி வரை மட்டுமே முதலீடு செய்யும் நிலையில் உள்ளனர்.

இதனால், இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கான உச்சவரம்பை ரூ.1 கோடி மற்றும் அதற்கு மேல் என மத்திய அரசு மாற்றியமைத்து அமல்படுத்த வேண்டும். 2022-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் கணக்கிட்டு இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும்.

கோவை, திருப்பூர் மாவட்ட தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு மத்திய ஜவுளித் துறை அமைச்சருடன் இணைந்து திட்டத்தில் உச்சவரம்பை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவரது மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 80-வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கோவையில் உள்ள கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 15.08.2026 அன்று இந்தியாவின் 80-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. கல்விக...

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழா: 193 பேருக்கு பாராட்டு, கிழக்கு மண்டலத்திற்கு டெங்கு தடுப்பு விருது

கோவை மாநகராட்சி சுதந்திர தின விழாவில் மேயர் ரங்கநாயகி ராமச்சந்திரன் தேசியக்கொடி ஏற்றி, 25 ஆண்டுகள் பணியாற்றியோர் உள்ளிட்...

“முருக கடவுள், பெண்கள் குறித்து அவதூறு: தவெக நிர்வாகி மீது கோவை சைபர் கிரைமில் நாம் தமிழர் கட்சியினர் புகார்

தமிழ் கடவுள் முருகன் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களின் குடும்பப் பெண்கள் குறித்து த.வெ.க நிர்வாகி மைக்கேல் என்பவர் தொட...

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் பெண் கொலை: 17 வயது சிறுவன் கைது

கோவை பாப்பநாயக்கன்பாளையத்தில் வீட்டில் தனியாக இருந்த சாந்தி (58) என்ற பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், 17 வயது சிறுவனை ரே...

கோவை வீரபாண்டி பிரிவில் மண் கடத்தி வந்ததாக 4 லாரிகள் பறிமுதல்

சத்தியமங்கலம் பகுதி விவசாயிகளுக்கு அரசு வழங்கிய இலவச மண் அள்ளும் அனுமதியை முறைகேடாகப் பயன்படுத்தி, வீரபாண்டி பிரிவில் பு...

இரவில் மர்ம நபர்கள் தாக்கியதாக ரத்தக் காயங்களுடன் போலீசாரிடம் வாலிபர் புகார்

கோவை ரேஸ் கோர்ஸ் காவல் நிலையம் அருகே கையில் ரத்த காயங்களுடன் கூலித் தொழிலாளி ஒருவர் தன்னை சிலர் தாக்க முயன்றதாக போலீசாரி...