கோவையில் உயர்ரக போதை பொருள் பதுக்கி வைத்திருந்த நபர் கைது - தனிப்படை போலீசார் நடவடிக்கை

பெ.நா.பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, விகனேஷ் என்ற நபர் மெத்தபெட்டமைன் என்ற உயர்ரக போதைப் பொருளை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.



கோவை: கோவை மாவட்டத்தில் போதை பொருள் புழக்கத்தை தடுக்க மாநகர மற்றும் மாவட்ட போலீசார வாகன சோதனை, இரவு ரோந்து என அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக தனிப்படை மற்றும் மதுவிலக்கு அமலாக்க போலீசார் உட்பட காவல்துறையின் பல்வேறு பிரிவுகள் போதை பொருட்களுக்கு முற்றிலும் ஒழிக்க களமிறங்கியுள்ளனர்.

அதன்படி, கோவை புற நகர் பகுதியான பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் மதுவிலக்கு அமலாக்க காவல் ஆய்வாளர் அமுதா, உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணா மற்றும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, கோவிந்த நாயக்கன்பாளையம் பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்துள்ளார்.

அதனால், அந்த நபரை விசாரித்த போது அவர் கொண்டையம் பாளையத்தைச் சேர்ந்த விக்னேஷ்(26) என்று என்று தெரியவந்தது. பின்னர், அவரது உடமைகளை தணிக்கை செய்த போலீசார், விக்னேஷ் அதீத போதை ஏற்றக் கூடிய மெத்தபெட்டமைன் (Methamphetamine) என்ற உயர்ரக போதைப் பொருளான பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.



இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், விற்பனைக்கு அவர் வைத்திருந்த 5.25 கிராம் எடையுள்ள மெத்தபெட்டமைன் மற்றும் 1/2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.



பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

போதைப் பொருட்கள் விற்பது அல்லது சட்ட ஒழுங்கிற்கு எதிராக செய்லோடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால், பொதுமக்கள் தயங்காமல் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212, வாட்ஸ்அப் எண் 7708-100100 என்ற எண்களில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

Newsletter

கோவையில் 5 தொகுதிகளில் த.வெ.க முன்னிலை – ஜி.சி.டி முன்பு பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!

கோவை மாவட்டத்தில் 5 தொகுதிகளில் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலை பெற்ற நிலையில், ஓட்டுகள் எண்ணப்படும் ஜி.சி.டி கல்லூரி வளாக...

தமிழக அரசியலில் புதிய திருப்பம்: தவெக முன்னிலை, மூத்த கட்சிகள் பின்னடைவு

தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகளில் காலை 9 மணி நிலவரப்படி தவெக 38 இடங்களில் முன்னிலையில் உள்ளது. முதல் முறையாக தேர...

Tomorrow’s Counting at GCT to Begin with Postal Ballots at 8 AM

Vote counting for all 10 constituencies in Coimbatore district will be held at the Government College of Technology (GCT...

139th Kandhuri Urs Festival in Udumalpet Marked by Prayers and Feast

The 139th annual Kandhuri Urs festival at Mureedu Baba Dargah in Udumalpet was marked by special prayers, spiritual disc...

உடுமலையில் 139வது உரூஸ் கந்தூரி விழா: சிறப்பு பிரார்த்தனை, அன்னதானம்

உடுமலையில் முரீது பாபா தர்காவில் நடைபெற்ற 139வது ஆண்டு உரூஸ் கந்தூரி விழாவில் சிறப்பு பிரார்த்தனை, ஆன்மீக உரைகள் மற்றும்...

திருப்பூரில் நீட் தேர்வு: 7 மையங்களில் 3,608 மாணவர்கள் பங்கேற்பு

திருப்பூர் மாவட்டத்தில் 7 மையங்களில் 3,608 பேர் நீட் தேர்வு எழுதுகின்றனர். ஜெய்வாபாய் மையத்தில் தேர்வு எழுத வந்த மாணவியி...