சசிகலா முதல்வராகக் கூடாது என்பதே தமிழக மக்களின் பிரார்த்தனையாக உள்ளது என லட்சிய தி.மு.க பொதுச்செயலாளர் டி.ராஜேந்தர் பேட்டி

கேரளா பவானி ஆற்றிலிருந்து 6 டி எம் சி தண்ணீர் மட்டும்தான் எடுக்க வேண்டும். ஆனால் பவானி ஆற்றின் குறுக்கே மஞ்சக்கண்டி மற்றும் தேக்குவட்டை இரண்டு இடங்களில் அணை கட்டியுள்ளதாகவும், பாடுவயலில் அணை கட்டுவதற்காக நிலத்தை சமப்படுத்தி ஆறு இடங்களில் கேரளா அரசு தடுப்பு அணை கட்டி 30 டி எம் சி வரை தண்ணீர் எடுக்க முயற்சிப்பதாகவும் லட்சியத் தி.மு.க பொதுச் செயலாளர் டி.ராஜேந்தர் குற்றஞ்சாட்டினார். 



மேலும், இதனை தடுக்க தமிழக அரசு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதை கருத்தில் கொண்டு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி லட்சிய தி.மு.க.வின் சார்பாக கோவையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

லட்சிய தி.மு.க-வின் பொதுச்செயலாளர் டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், எம் எல் ஏ-க்கள் சிறைபிடிப்பு மற்றும் பேருந்தில் கூட்டிச்செல்வது நடந்துகொண்டு இருப்பதாகவும், அ.தி.மு.க.விற்கு வேண்டுமானால் சசிகலா பொதுச்செயலாளராக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டுக்கு முதல்வராக சசிகலா வரக்கூடாது என்பதே மக்களின் பிரார்த்தனையாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.

மேலும், சசிகலா முதல்வரானால் ஏலம் போட்டு தமிழ்நாடு விற்கப்பட்டுவிடும். மேலும் தி.மு.க.வில் ஸ்டாலின் முதலமைச்சராக வருவதற்கு யாரும் பல்லக்கு தூக்கக்கூடாது என்பதில் லட்சிய தி.மு.க முனைப்பாகயிருப்பதாகவும், பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக யார் செயல்படுகிறார்கள் என்பதை பன்னீர்செல்வம்தான் சொல்ல வேண்டும்.

சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பு வந்தால் முதல்வர் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. இந்த வழக்கில் நியாயமான தீர்ப்பு கிடைக்கும் என்பதில் நம்பிக்கை உள்ளது. சுப்பிரமணிய சுவாமி மீது சாணியை கரைத்து அ.தி.மு.க மகளிரணியினர் ஊற்றியபோதும் சசிகலா வர வேண்டும் என அவர் கூறுவது என்ன பேசுகிறார் என்பது அவருக்கே தெரியாதது போல் உள்ளது என டி.ராஜேந்தர் குற்றம் சாட்டினார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...