கோவை ஆலாந்துறை அருகே இருசக்கர வாகனம் மோதி சாலையை கடக்க முயன்றவர் பலி - ஓட்டுனரிடம் போலீசார் விசாரணை..!

கோவை ஆலாந்துறை அருகேயுள்ள சிறுவாணி சாலையை கடக்க முயன்ற தனியார் நிறுவன காவலாளி சண்முகசுந்தரம் மீது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மாவட்டம் ஆலாந்துறை கிரீன் கார்டன் பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம் (63). இவர் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் நேற்று பணிக்குச் சென்ற போது, சிறுவாணி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது கோவையில் இருந்து பூலுவபட்டியை நோக்கிச் அதிவேகமாக சென்ற இரு சக்கர வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்ற சண்முகசுந்தரம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த சண்முக சுந்தரத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இச்சம்பவம் தொடர்பாக ஆலாந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த சதீஷ்குமார் என்ற இளைஞரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருசக்கர வாகனம் மோதியதில் தனியார் நிறுவன காவலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 75 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் ந...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் உள்ள ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ச்சியான மழை பெய்து வருவத...

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...