கோவை கிணத்துக்கடவு அருகேயுள்ள கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி பொதுமக்கள் முற்றுகை..!

கிணத்துக்கடவு அடுத்த பொட்டையாண்டிபுரம்பு பகுதியில் செயல்படும் கல்குவாரியால் ஏற்கனவே வீடுகள் சேதமடைந்த நிலையில் மீண்டும் கல்குவாரி செல்படுவதற்கு தடை விதிக்க கோரி பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கோவை: கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே பொட்டையாண்டிபுரம்பு பகுதியில் ரஞ்சித் குமார் என்பவருக்கு சொந்தமான கல்குவாரி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், 6 மாதங்களுக்கு முன்பு இந்த கல்குவாரியில் பாறையை உடைக்க வைத்த வெடியால் அருகில் உள்ள வீடுகளுக்குள் கற்கள் விழுந்து வீடுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கல்குவாரியை இயக்கக் கூடாது என்று வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர். இந்த நிலையில் ஆறு மாதங்களுக்குப் பிறகு கல்குவாரியை இயக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது.



இந்நிலையில் மீண்டும் கல்குவாரி இயக்கப்பட்டால் விளை நிலங்களும் வீடுகள் சேதமடையும் எனக் கூறியுள்ள பொதுமக்கள், கல்குவாரியின் அனுமதியை ரத்து செய்யக்கோரி, கல்குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் சம்பவ இடத்துக்கு வந்த வருவாய்த்துறை மற்றும் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தையடுத்து கிராம மக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Newsletter

ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் 3-ல் மேம்பாலம் அமைக்க கோரி முதலமைச்சருக்கு பொதுமக்கள் மனு

கோவை ஒண்டிப்புதூர் ரயில்வே கேட் எண். 3-ல் மேம்பாலம் கட்ட உடனடியாக நிதி ஒதுக்கீடு செய்ய கோரி, சிவலிங்கபுரம் குடியிருப்போர...

கோவை அம்மா உணவகங்கள் மூன்று மாதங்களில் ரூ.87.30 இலட்சம் விற்பனை சாதனை

கோவை மாநகராட்சியில் செயல்படும் 12 அம்மா உணவகங்கள் மூலம் மே முதல் ஜுலை வரையிலான மூன்று மாதங்களில் 11.39 இலட்சம் உணவு வகைக...

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா கிழக்கு மற்றும் வடக்கு மண்டலங்களில் பாதாள சாக்கடை திட்ட பணிகளை ஆய்வு செய்தார். க...

கோவை, கேரளா அதிகாரிகள் நள்ளிரவு அதிரடி சோதனை; 7,000 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்

கோவை மத்திய நுண்ணறிவு பிரிவு மற்றும் கேரளா கண்ணூர் ஆயத்தீர்வை துறையினர் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், 7,000 லிட்டர்...

கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 4 ஆண்டு சிறை - கோவை நீதிமன்றம் தீர்ப்பு

கோவை துடியலூர் பகுதியில் ஏழு மாத கர்ப்பிணி மனைவியை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கணவருக்கு நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை...

அமராவதி அணை நீர்மட்டம் 43.87 அடியாக உயர்வு; திருமூர்த்தி அணையில் 35.02 அடி

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 5 அன்று 43.87 அடியாக உயர்ந்துள்ளது. தொடர் நீர்வரத்தால் அண...