கோவை கணபதி அருகே முறையாக ஊதியம் வழங்காத காண்டிராக்டரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

கணபதி அருகே முறையாக ஊதியம் தராத காண்டிராக்டர் நந்தகோபாலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், துணை ஆணையர் இன்றே காசோலை வழங்கப்படும் என உறுதி அளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் காண்டிராக்டர்கள் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நந்தகோபால் என்ற காண்டிராக்டர், தூய்மை பணியாளர்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.



இதனை கண்டித்து, கோவை மாவட்டம் கணபதி பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு முன்பு தூய்மை பணியாளர் நலக்குழு மற்றும் ஏ.ஐ.சி.டி.யு சங்கத்தினருடன் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தை தொடர்ந்து, வடக்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், தூய்மை பணியாளர்களுக்கு இன்றைய தினமே காசோலை வழங்கப்படும் என்றும், வரும் திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பியோட்டம்: ஆந்திரா போலீசாரை ஏமாற்றிய மோசடி நபர் மீண்டும் எஸ்கேப்

கோவை அரசு மருத்துவமனையின் கைதிகள் வார்டில் சிகிச்சை பெற்று வந்த மோசடி வழக்கில் கைதான ஆந்திராவைச் சேர்ந்த பிம்முடு அஜித்க...

“மின்தேவைக்கு ஏற்ப கட்டமைப்பபை உருவாக்க தவறிய திமுக” - கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் குற்றச்சாட்டு.

ரூ.7,000 கோடிக்கும் மேல் செலவிடப்பட்டதாக கூறப்பட்டாலும், மின்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகளுக்காக வெறும் ரூ.627 கோடி மட்டும...

கோவையில் மாணவர்களுக்கு ஆபாச பதிவுகள் அனுப்பிய ஆசிரியர் போக்சோவில் கைது

கோவையில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கு வாட்ஸ்-அப் மூலம் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் அனுப்பியதாக குற்றம்சாட்டப...

சாமானியர்களை வாட்டும் எரிவாயு விலை உயர்வு; காங்கிரஸ் சார்பில் திருப்பூரில் தெருமுனைப் பிரச்சாரம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து திருப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் தெருமுனைப் பிரச்சாரம் நடத...

வெளிநாட்டு பறவைகள் வருகையை முன்னிட்டு பெரியகுளம், வாலாங்குளத்தில் ஆகாயத்தாமரை அகற்றும் பணி தீவிரம்

ஜூலையில் வெளிநாட்டுப் பறவைகள் வருகை மற்றும் தென்மேற்குப் பருவமழையை முன்னிட்டு, கோவையின் பெரியகுளம் மற்றும் வாலாங்குளத்தி...

ரூ.50 லட்சம் கேட்டு கோவையை சேர்ந்த இருவர் கடத்தல்: 2 காவலர்கள் பணியிடை நீக்கம்; மேலும் ஒருவர் கைது

கோவையை சேர்ந்த இருவரை ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட வழக்கில் கைதான தலைமை காவலர்களான ஆனந்தன் மற்றும் மோகன் ஆகிய இருவரைய...