கோவை கணபதி அருகே முறையாக ஊதியம் வழங்காத காண்டிராக்டரை கண்டித்து பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள்

கணபதி அருகே முறையாக ஊதியம் தராத காண்டிராக்டர் நந்தகோபாலை கண்டித்து தூய்மை பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்ட நிலையில், துணை ஆணையர் இன்றே காசோலை வழங்கப்படும் என உறுதி அளித்தையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.


கோவை: கோவை மாநகராட்சி உட்பட்ட பகுதியில் காண்டிராக்டர்கள் மூலம் தூய்மை பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில், நந்தகோபால் என்ற காண்டிராக்டர், தூய்மை பணியாளர்கள் முறையாக ஊதியம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.



இதனை கண்டித்து, கோவை மாவட்டம் கணபதி பகுதியில் உள்ள சூர்யா மருத்துவமனைக்கு முன்பு தூய்மை பணியாளர் நலக்குழு மற்றும் ஏ.ஐ.சி.டி.யு சங்கத்தினருடன் இணைந்து தூய்மைப் பணியாளர்கள் இன்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.



இந்த போராட்டத்தை தொடர்ந்து, வடக்கு மண்டல துணை ஆணையர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில், தூய்மை பணியாளர்களுக்கு இன்றைய தினமே காசோலை வழங்கப்படும் என்றும், வரும் திங்கட்கிழமை தொழிலாளர்களுக்கு அவரவர் வங்கிக் கணக்கில் ஊதியம் வரவு வைக்கப்படும் எனவும் உறுதி அளிக்கப்பட்டது.



இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டம் காரணமாக அப்பகுதியில் சில மணி நேரம் பரபரப்பான சூழல் நிலவியது.

Newsletter

மாநில அளவில் முதலிடம் பெற்ற கோவை மாநகராட்சி: அலுவலர்கள், களப்பணியாளர்களுக்கு மேயர் நன்றி..!

மாநில அளவில் சிறந்த மாநகராட்சிக்கான முதல் பரிசைப் கோவை பெற்றதற்காக, மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள், தூய்மைப் பணியாளர...

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடக்கம்

கோவை அரசு கலைக் கல்லூரியில் பெண்கள் மேம்பாட்டு அமைப்பு தொடங்கப்பட்டது. விழாவில் 120-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரிய...

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் பெரும் தீ விபத்து: 100 ஊழியர்கள், 36 வாகனங்களுடன் மாநகராட்சி போராட்டம்

வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் 3.1 ஏக்கரில் ஏற்பட்ட தீ விபத்தை கட்டுப்படுத்த மாநகராட்சி ஆணையர் தலைமையில் 100 பணியாளர்கள்,...

கோவை கற்பகம் உயர்கல்வி அகாடமியில் இந்திய அறிவு மரபு அடிப்படையில் வரலட்சுமி பூஜை சிறப்பாக நடைபெற்றது

கற்பகம் அகாடமி ஆஃப் ஹையர் எஜுகேஷன் பல்கலைக்கழகத்தின் இசைத்துறை மற்றும் நடனத்துறை சார்பில் வரலட்சுமி பூஜை இந்திய அறிவு மர...

கோவையில் 1,400 போதை மாத்திரைகள், 300 கிராம் கஞ்சா பறிமுதல் - கணவன், மனைவி கைது

கோவைபுதூர் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக கணவன், மனைவி இருவரை குனியமுத்தூர் போலீசார் கை...

கோவை வேளாண் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்தில் தொழில்துறை களப்பயணம்

கோவை வேளாண் பொறியியல் கல்லூரியின் 56 B.Tech மாணவர்கள் அக்வாசப் இன்ஜினியரிங் நிறுவனத்திற்கு தொழில்முறை களப்பயணம் மேற்கொண்...