கோவையில் ரூ.94 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்த மேயர் கல்பனா

கோவை தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களில் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ நகர்நல மையம்‌ கூடுதல் கட்டிடம், வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகளை மேயர் கல்பனா ஆனந்தகுமார் பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.


கோவை: கோவை‌ மாநகராட்சி மத்திய மண்டலம்‌ வார்டு எண்‌.83க்கு உட்பட்ட சுங்கம்‌ நகர்நல மையத்தில்‌ பெங்களுரை சேர்ந்த HF Interior தொண்டு நிறுவனம்‌ நிதியிலிருந்து ரூ.44 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ மருத்துவமனையின்‌ கூடுதல்‌ கட்டிடங்கள்‌, குடிநீர் மற்றும்‌ கழிவறை வசதிகள்‌ உள்ளிட்ட கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது‌.

தெற்கு மண்டலம்‌ வார்டு எண்‌.88க்குட்பட்ட குனியமுத்தூர்‌, ரைஸ்மில்‌ சாலையில்‌ உள்ள மாநகராட்சி தொடக்க பள்ளியில்‌ அமெரிக்காவில்‌ வசித்து வரும்‌ செந்தில்குமார்‌, ஹேமாகுமார்‌ ஆகியோர்‌ குடும்ப சார்பில்‌ 100 சதவீத பங்களிப்பாக நமக்கு நாமே திட்டத்தில்‌ ரூ.50 லட்சம்‌ மதிப்பீட்டில்‌ 5 கூடுதல்‌ வகுப்பறைகள்‌ மற்றும்‌ கழிவறைகள்‌ கட்டுமான பணிகள் நடைபெறவுள்ளது.



மொத்தம் ரூ.94 லட்சம்‌ மதிப்பீட்டிலான இந்த 2 கட்டுமான பணிகளுக்கான பூமி பூஜை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்வியில் கோவை மாநகர மேயர் கல்பனா ஆனந்தகுமார்‌ பூமிபூஜை செய்து துவக்கி வைத்தார்‌.



இந்நிகழ்ச்சியில்‌ துணை மேயர்‌ ரா.வெற்றிசெல்வன்‌, மாநகராட்சி துணை ஆணையாளா்‌ மரு.மோ.ஷர்மிளா, மத்திய மண்டல தலைவா்‌ மீனாலோகு, மாமன்ற உறுப்பினர்கள்‌ செந்தில்குமார்‌, வி.சுமா, நகர்நல அலுவலர்‌ மரு.பிரதீப்,‌ வா.கிருஷ்ணகுமார்‌, உதவி ஆணையாளர்‌ மகேஷ் கனகராஜ்‌,

மத்திய மண்டல நகர்நல அலுவலா்‌ மரு.வசந்த்‌ திவாகர்‌, சுகாதார அலுவலர்‌ ராமச்சந்திரன்‌, உதவி பொறியாளர்‌ கனகராஜ்‌, சுகாதார ஆய்வாளர்‌ ஸ்ரீரங்கராஜ்‌ மற்றும்‌ மாநகராட்சி அலுவலர்கள்‌ உள்ளிட்டோர் உடனிருந்தனர்‌.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...