குறு, சிறு தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்ததால், ஹோட்டல்களுக்கு வேலை தேடிச் செல்லும் தொழிலாளர்கள்..!

கோவையில் செயல்படும் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்த நிலையில், தொழில்நுட்ப பணியாளர்கள் ஹோட்டல் ஊழியர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக தொழில்துறையினர் தகவல்.


கோவை: தொழில் நகரமான கோவை ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள், பம்ப்செட், வார்படம், கிரைண்டர், பொறியியல் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது. மேலும் கோவையில் 1.5 லட்சம் பதிவு செய்த குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் செயல்படுகின்றன.

கோவையில் உள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும் மறைமுகமாகவும் 4 லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், பம்ப்செட், வார்படம் உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் நிலவும் மந்த நிலை காரணமாக கோவையில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணி ஆணைகள் 40 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழில்நுட்ப பணியாளர்கள் கூட ஹோட்டல் தொழிலாளர்களாக மாறும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.



இது தொடர்பாக கோவை மாவட்ட சிறு தொழில்கள் சங்கத்தின் (கொடிசியா) தலைவர் திருஞானம் கூறியதாவது, பருவமழை, உலகளாவிய பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கோவையில் உள்ள தொழில் நிறுவனங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பணி ஆணைகள் 40 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் தொழில் முனைவோர் நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். ஜனவரிக்கு பின் நிலைமை சீரடையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.



இதேபோல், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கத்தின் (டாக்ட்) தலைவர் ஜேம்ஸ் கூறியதாவது, கொரோனா நோய் தொற்று மற்றும் மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன.

தாக்கத்தில் இருந்து மீண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது மீண்டும் ஜிஎஸ்டி மின்கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பணி ஆணைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறு, சிறு தொழில்கள் வளர்ச்சியில் மத்திய அரசும் மாநில அரசும் ஒரே நிலைப்பாடு தான் கொண்டுள்ளன.

நாங்கள் கவனஈர்ப்பு போராட்டம் நடத்தியும் பலனில்லை. 30 குறு மற்றும் சிறு தொழில் நிறுவனங்களில் 5 ஆயிரம் நிறுவனங்கள் மட்டுமே பெயரளவுக்கு செயல்படுகின்றன. பிட்டர், டர்னர், வெல்டர் உள்ளிட்ட தொழில்நுட்ப பணியாளர்களுக்கு வேலை கொடுக்க முடியவில்லை.

இதனால் நிலைமை சீரடையும் வரை ஹோட்டல் உள்ளிட்ட சேவை துறையின் கீழ் உள்ள பல்வேறு நிறுவனங்களில் பணியாற்ற சென்று கொண்டுள்ளனர். இதே நிலை நீடித்தால் மிகவும் ஆபத்து.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...