திருப்பூரில் ‘மீண்டும் மஞ்சப்பை’ உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த எம்.எல்.ஏ செல்வராஜ்

பல்லடம் அடுத்த சித்தம்பலம் ஊராட்சியில் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை தொடங்கி வைத்த திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ செல்வராஜ், இருசக்கர விழிப்புணர்வு வாகனம், சமுதாய நலக்கூடத்தின் பூமி பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை துவக்கி வைத்தார்.



திருப்பூர்: தமிழகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளை ஒழிப்பதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மேலும், மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த “மீண்டும் மஞ்சப்பை” பயன்பாடு குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்துள்ள சித்தம்பலம் ஊராட்சி மற்றும் தனியார் ரோட்டரி நிர்வாகத்தினர் இணைந்து சித்தம்பலம் ஊராட்சியை பிளாஸ்டிக் இல்லா ஊராட்சியாக மாற்றும் முயற்சியில் களமிறங்கியுள்ளனர்



இந்த நிகழ்வை திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ், மக்களிடம் மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை துவக்கி வைத்தார்.



அப்போது, பல்லடம் ரெயின்போ ரோட்டரியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் தமிழகம் முழுவதும் சென்று பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு மற்றும் மஞ்சப்பை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரச்சார பயணத்தையும் துவக்கி வைத்தார்.



இதையடுத்து சித்தம்பலம் ஊராட்சிக்கு உட்பட்ட புள்ளியப்பம் பாளையம் பகுதியில் 38 லட்சம் ரூபாய் மதிப்பில் உணவு அருந்தும் கூடத்துடன் கூடிய சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிக்கான பூமி பூஜையை துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பல்லடம் மேற்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

உலக தாய்ப்பால் வாரம்: விழிப்புணர்வு பேரணி நடத்திய ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை

கோவையில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா செவிலியர் கல்லூரி இணைந்...

வால்பாறையில் உதயநிதி கைதை கண்டித்து திமுகவினர் சாலை மறியல்: 25க்கும் மேற்பட்டோர் கைது

வால்பாறையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைதை கண்டித்து திமுக தொண்டர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இளைஞரணி பொ...

உதயநிதி ஸ்டாலின் மீது நடவடிக்கை கோரி கோவை காவல் ஆணையரிடம் தவெக மகளிர் அணி புகார்

காவிரி நதிநீர் விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய்யை விமர்சித்து பேசியதாகக் கூறி, உதயநிதி மீது சட்டரீதியான நடவ...

கேஎம்சிஹெச்சில் உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர் திறப்பு விழா

கோவை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் ஆகஸ்ட் 2ம் தேதி 'லைஃப் ஆப்டர் லைஃப் 2026' விழாவும், உறுப்பு தானமளித்தோர் நினைவுச் சுவர்...

சித்தாபுதூர் பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளி ஊஞ்சல் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது

கோவை சித்தாபுதூரில் உள்ள பண்ணாரி மாரியம்மன் கோவிலில் ஆடி மூன்றாம் வெள்ளியை முன்னிட்டு ஊஞ்சல் உற்சவம் ஜூலை 31ஆம் தேதி சிற...

அமராவதி 42 அடி, திருமூர்த்தி 35 அடி: இன்றைய அணை நீர்மட்ட நிலவரம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் மழை வரத்தால் 42.03 அடியாகவும், திருமூர்த்தி அணை நீர்மட்டம்...