கோவை குனியமுத்தூர் அருகே வாகன சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்…!

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசியை குடிமை பொருள் குற்றபுலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு பொதுவிநியோக ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே ஆய்வாளர் விவேகானந்தன், சார்பு ஆய்வளர் சந்திரசேகர், கலைச்செல்வன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ராமதாஸ் (29) என்பவரை பிடித்து விசாரித்த போது, கோவையில் மலிவு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை கேரளா கள்ள சந்தையில் விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் இருந்து 3.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ராமதாஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...

கோவையில் பள்ளி, பேருந்து நிலையங்கள் அருகேயுள்ள டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு.

தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகில் செயல்பட்டு வரும் 717...

சென்னை - கோவை இடையே மே 31 வரை கோடைகால சிறப்பு ரயில் சேவை; தொழில்துறை வரவேற்பு

கோடை விடுமுறை காலத்தில் சென்னை - கோவை இடையே மே 13 முதல் 31 வரை சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்...

2026 நீட் தேர்வு ரத்து: மே 3ஆம் தேதி நடைபெற்ற NEET தேர்வு செல்லாது! தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

வினாத்தாள் கசிந்ததாக எழுந்த புகார்கள் மற்றும் தேர்வின் நம்பகத்தன்மை குறித்த சந்தேகங்களைத் தொடர்ந்து, நாடு முழுவதும் கடந்...