கோவை குனியமுத்தூர் அருகே வாகன சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்…!

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசியை குடிமை பொருள் குற்றபுலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு பொதுவிநியோக ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே ஆய்வாளர் விவேகானந்தன், சார்பு ஆய்வளர் சந்திரசேகர், கலைச்செல்வன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ராமதாஸ் (29) என்பவரை பிடித்து விசாரித்த போது, கோவையில் மலிவு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை கேரளா கள்ள சந்தையில் விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் இருந்து 3.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ராமதாஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...