கோவை குனியமுத்தூர் அருகே வாகன சோதனையின் போது கேரளாவுக்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசி பறிமுதல்…!

கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை சோதனை செய்தபோது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது.


கோவை: கோவை குனியமுத்தூர் அருகே கேரளாவிற்கு கடத்த முயன்ற 3.5 டன் ரேசன் அரிசியை குடிமை பொருள் குற்றபுலனாய்வு போலீசார் பறிமுதல் செய்தனர்.

கோவையில் இருந்து கேரளாவிற்கு பொதுவிநியோக ரேசன் அரிசி கடத்தப்படுவதை தடுக்க குடிமை பொருள் குற்றப்புலனாய்வு போலீசார் தனிப்படை அமைத்து கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை - பாலக்காடு நெடுஞ்சாலை குனியமுத்தூர் அரசு மேல்நிலை பள்ளி அருகே ஆய்வாளர் விவேகானந்தன், சார்பு ஆய்வளர் சந்திரசேகர், கலைச்செல்வன், ஆகியோர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர், அப்போது அங்கு வந்த கேரளா பதிவு எண் கொண்ட மினி ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, அதில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி பதுக்கி கடத்த முயன்றது தெரியவந்தது. இதையடுத்து, வாகனத்தை ஓட்டி வந்த கேரளா மாநிலத்தை சேர்ந்த ராமதாஸ் (29) என்பவரை பிடித்து விசாரித்த போது, கோவையில் மலிவு விலைக்கு ரேசன் அரிசியை வாங்கி அதனை கேரளா கள்ள சந்தையில் விற்பனை செய்ய கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதையடுத்து, வாகனத்தில் இருந்து 3.5 டன் ரேசன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், ராமதாஸை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கே.ஜி.சாவடி பகுதியில் நாளை (15.07.2026) மின்தடை: மாதாந்திர பராமரிப்பு பணிகள்

மதுக்கரை தாலுக்கா கே.ஜி.சாவடி துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடை...

கீரணத்தம் பகுதியில் நாளை (15.07.2026) 8 மணி நேரம் மின்தடை

கீரணத்தம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூலை 15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை...

விலாங்குறிச்சியில் நாளை (15.07.2026) மின் பராமரிப்பு பணி - 8 மணி நேரம் மின்தடை

விலாங்குறிச்சி துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தண்ண...

சைபர் கிரைம்: ஆன்லைனில் ஆபாச வீடியோ பார்த்ததாக மிரட்டி லட்சக்கணக்கில் மோசடி: 2 பேர் கைது

ஆபாச வீடியோ பார்த்ததாக கூறி போலீஸ் அதிகாரிகள் என மிரட்டி, வடமாநில வியாபாரிகளிடம் ஆன்லைன் மூலம் பணம் பறித்த வழக்கில் இருவ...

பருவத் தேர்வு கட்டணம் செலுத்தியும் அபராதம்: பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு எதிராக தொலைதூரக் கல்வி மாணவர்கள் குற்றச்சாட்டு

பருவத் தேர்வுக்கான கட்டணத்தை காலக்கெடுவுக்குள் செலுத்தியிருந்தும், தொழில்நுட்பக் கோளாறால் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக ப...

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த தமிழர்களின் உடல்கள் கோவை விமான நிலையம் வந்தடைந்தன

வியட்நாம் படகு கவிழ்ப்பு விபத்தில் உயிரிழந்த 6 தமிழர்களில், திருச்சியைச் சேர்ந்த 3 பேரின் உடல்கள் கோவை சர்வதேச விமான நி...