கோவை தடாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் - பரபரப்பு..!

செங்கல் சூளை நிலத்தை விற்பனை செய்வதாக தனியார் அமைப்பு ஒன்று, தவறான கருத்துகளை பரப்புவதாக கூறி கோவை தடாகம் காவல் நிலையத்தை செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கு மேற்பட்ட செங்கல் சூளைகள் இயங்கி வந்தன. இதில் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

இந்த நிலையில் மாசு கட்டுப்பாட்டு வாரியம், பசுமை தீர்ப்பாயத்தின் தடை உத்தரவால் செங்கல் சூளைகள் தற்போது இயங்குவதில்லை. இந்த நிலையில் செங்கல் சூளைகள் நடத்தி வந்த ஒரு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாக தங்கள் இடங்களை விற்பனை செய்ய முயன்று வருகின்றனர்.

சில நாட்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த தனியார் அமைப்பு பெயரில் கடிதம் ஒன்று தடாகத்தை சேர்ந்த ஒரு சிலருக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் பசுமை தீர்ப்பாயம் வழக்கு நடைபெற்று வருவதால் இந்த இடங்களை யாரும் வாங்க வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்த தகவலை அறிந்த செங்கல் உற்பத்தியாளர் சங்கத்தினர் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அதன் தலைவர் ஜெம் பழனிச்சாமி தலைமையில் தடாகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு புகார் மனுவை அளித்துள்ளனர்.

அந்தப் புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தனியார் அமைப்பின் மூலம் வந்த கடிதத்தில் தவறான கருத்துக்கள் மூலம் பொது மக்களை குழப்பம் அடைய செய்து வருகின்றனர்.

அவர்கள் யார் என்று கண்டறிந்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் தடாகம் சப்-இன்ஸ்பெக்டர் ஆறுமுக நயினர், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து முற்றுகையில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Newsletter

செவித்திறன் குறைபாடுடையோருக்கு வேலைவாய்ப்பு: Lakshmi Ring Travellers நிறுவனத்தின் 'நம்ம லாண்டரி' சேவை

கோவையில் Lakshmi Ring Travellers நிறுவனம், செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் குறைபாடுடையோருக்காக 'நம்ம லாண்டரி' என்ற சலவ...

மேட்டுப்பாளையம் தொகுதியில் டி.ஆர்.எஸ் சுயேட்சை வேட்பாளராக களமிறக்கம்

மேட்டுப்பாளையம் தொகுதியில் திமுக போட்டியிட வாய்ப்பு மறுத்ததால், கட்சியை விட்டு வெளியேறிய டி.ஆர். சண்முகசுந்தரம் இன்று சு...

மேட்டுப்பாளையம் தொகுதியில் Kavitha Kalyanasundaram வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு மாவட்டம் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் Kavitha Kalyanasundar...

மேட்டுப்பாளையம் தொகுதி அதிருப்திக்குப் பிறகு ராஜினாமா: திமுக T R சண்முகசுந்தரம் தனியாக போட்டி?

குடும்ப சூழ்நிலை மற்றும் பணி சுமை காரணமாக திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் TR சண்முகச...

கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக வேட்பாளர் கனிமொழி வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கனிமொழி, சனிக்கிழமை கோட்டாட்சியர் வ...

கோவை வடக்கில் போட்டியிடும் வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி பதிவு

பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன், கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பளித்த கட்சித் தலைவர்களுக்கு நன்ற...