கோவை குனியமுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞர் கைது..!

புட்டுவிக்கி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.28,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் (9.12.2022) இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் ரூ.500 நோட்டு கொடுத்து மது பாட்டில் வாங்கியுள்ளார்.

அப்போது, கடையில் இருந்த காசாளர் அந்த நோட்டை சோதனை செய்த போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, குனியமுத்தூரில் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மதுக்கரை மலை நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் ரமேஷ் (20) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலையில் கிடந்த கவரில் ரூ.28,500 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகவும் தெரியவந்தது.

இதனை கொண்டே டாஸ்மாக் கடையில் நேற்றைய தினம் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.28,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

அம்மா உணவகங்கள்: புதுப்பித்து, தரமான, சுவையான உணவு வழங்க முதல்வர் உத்தரவு – எஸ்.பி.வேலுமணி பாராட்டு..!

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் 620 அம்மா உணவகங்களை புதுப்பித்து, தரமான மற்றும் சுவையான உணவு வழங்க முதலமைச்சர் விஜய்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...

கோவை போலீஸ் முயற்சி: கடந்த ஆண்டை விட 27 சதவீதம் குறைந்த சாலை விபத்துகள்

கோவை மாநகரில் விபத்து அதிகம் நிகழும் பகுதிகளில் அமைக்கப்பட்ட ஜிக்-ஜாக் தடுப்புகள் மூலம் சாலை விபத்து மரணங்கள் 27 சதவீதம்...

விதி மீறல்களில் ஈடுபட்டால் சட்ட நடவடிக்கை; டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஆனைமலை டிஎஸ்பி எச்சரிக்கை

ஒரே நபருக்கு அதிக அளவில் மதுபானங்கள் விற்பனை செய்தாலோ, கள்ளச்சந்தையில் மது விற்பனை நடைபெற்றாலோ, குண்டர் சட்டத்தின் கீழ்...

விபத்தில் உயிரிழந்த கோவை கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்; அரசு சார்பில் மரியாதை

விபத்தில் மூளைச்சாவு அடைந்த கோவை மாணவர் சங்கீதின் குடும்பத்தினர் உடல் உறுப்புகள் தானம் செய்த நிலையில், கோயம்புத்தூர் வடக...