கோவை குனியமுத்தூர் அருகே டாஸ்மாக் கடையில் கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞர் கைது..!

புட்டுவிக்கி சாலையில் உள்ள டாஸ்மாக் கடையில் ரூ.500 கள்ள நோட்டை மாற்ற முயன்ற இளைஞரை ஊழியர்கள் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்த நிலையில், அவரிடம் இருந்து ரூ.28,500 மதிப்புள்ள கள்ள நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாவட்டம் குனியமுத்தூர் புட்டுவிக்கி சாலையில் டாஸ்மாக் கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் (9.12.2022) இந்த டாஸ்மாக் கடைக்கு வந்த இளைஞர் ஒருவர் ரூ.500 நோட்டு கொடுத்து மது பாட்டில் வாங்கியுள்ளார்.

அப்போது, கடையில் இருந்த காசாளர் அந்த நோட்டை சோதனை செய்த போது அது கள்ள நோட்டு என்பது தெரியவந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்கள் அந்த இளைஞரை மடக்கிப் பிடித்து, குனியமுத்தூரில் போலீசில் ஒப்படைத்தனர்.

அந்த நபரிடம் போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பிடிபட்ட நபர் மதுக்கரை மலை நகர் பகுதியை சேர்ந்த மகேந்திரன் மகன் ரமேஷ் (20) என்பது தெரியவந்தது.

மேலும் அவர் காலி மதுபாட்டில்களை சேகரித்து விற்பனை செய்யும் வேலை செய்து வந்ததும், கடந்த சில நாட்களுக்கு முன் எம்.ஜி.ஆர். நகர் பகுதியில் சாலையில் கிடந்த கவரில் ரூ.28,500 மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் கிடைத்ததாகவும் தெரியவந்தது.

இதனை கொண்டே டாஸ்மாக் கடையில் நேற்றைய தினம் மதுபாட்டில்களை வாங்கியுள்ளார். இதையடுத்து ரமேஷை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ரூ.28,500 மதிப்பிலான கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

டாஸ்மாக் கடையில் ஒருவர் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...