உதகையில் காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி - இலவச தலைகவசங்கள் வழங்கப்பட்டது

உதகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.



நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் காவல்துறையின் சார்பில் நடத்தபட்ட சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியில் இலவச தலைகவசங்கள் வழங்கபட்டது. மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் பரிசுகள் வழங்கி ஊக்குவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகை சேரிங் கிராஸ் பகுதியில், காவல்துறையின் சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நீலகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 30 நபர்களுக்கு இலவச தலைக்கவசம் வழங்கப்பட்டது.



முன்னதாக, சாலை பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவர்களுக்கு இடையே நடத்தப்பட்ட கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி, பேச்சுப்போட்டி, கையெழுத்து போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.



பின்னர், சாலை பாதுகாப்பு குறித்து பேசிய ஆட்சியர் S.P.அம்ரித், சாலை பாதுகாப்பு வார விழாவின் நோக்கமே வாகன ஓட்டிகள் விபத்தில்லாமல் வாகனத்தை இயக்க வேண்டும் என்பதே. இரு சக்கர வாகன ஓட்டிகள் கண்டிப்பாக அனைவரும் தலைக்கவசம் அணிய வேண்டும்.

வாகன ஓட்டிகள் பாதுகாப்பான வேகத்திலும், இரவில் எதிரில் வாகனம் வரும் பொது ஒளியை குறைத்து, சாலை சந்திப்பில் வலது புறத்திலிருந்து வரும் வாகனங்களுக்கு வழிவிட்டு, முன் செல்லும் வாகனங்களுக்கு போதிய இடைவெளி விட்டும், வளைவு, குறுகிய சாலை, பாலங்கள், மருத்துவமனை, பள்ளிகள் உள்ள இடங்களில் கவனமாக செல்ல வேண்டும்.

மேலும், போக்குவரத்து சிக்னல்களை மதித்து, வாகனம் ஓட்டுவது மிக முக்கியம். வகானகள் இயக்கும் போது, செல்போன் பயன்படுத்தாமலும், நான்கு சக்கர வாகனம் ஓட்டும் போது சீட் பெல்ட் அணிந்தும் வாகனம் ஓட்ட வேண்டும். அவ்வாறு வாகனம் ஓட்டும் பொழுது விபத்துக்களை தவிர்ப்பது மட்டுமல்லாமல் உயிரிழப்புகளையும் தடுக்க முடியும் என்றார்.



இந்நிகழ்ச்சியில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத், திட்ட இயக்குநர் சிறப்பு பகுதி மேம்பாட்டு திட்டம் டாக்டர் மோனிகா ராணா, டேன் டீ பொது மேலாளர் ஜெயராஜ், வெலிங்டன் பாளையவாரிய முதன்மை செயல் அலுவலர் அலி, மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மோகன் நவாஸ், உதகை வருவாய் கோட்டாட்சியர் துரைசாமி, வட்டார போக்குவரத்து அலுவலர் தியாகராஜன், உதகை துணை காவல் கண்காணிப்பாளர் மகேஷ்வரன், உதகை வட்டாட்சியர் ராஜசேகரன், உட்பட அரசுத்துறை அலுவலர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவிகள் மற்றும் காவல் துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...

தமிழ்ப் புத்தாண்டு: மருதமலை கோயிலுக்கு காா் தடை; பேருந்து சேவை அனுமதி

தமிழ்ப் புத்தாண்டு தினமான ஏப்ரல் 14ல் கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு நான்கு சக்கர வாகனங்களில் செல்ல தடை விதி...