கூடலூரில் பிடிபட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு சீகூர் வனப்பகுதியில் விடுவிப்பு

கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பாதுகாப்பாக லாரியில் ஏற்றபட்டு இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட சீகூர் வன பகுதிக்கு உட்பட்ட அசுர மட்டம் வனத்துக்குள் விடுவிக்கப்பட்டது. கூடலூர் அருகே பிடிபட்ட PM2 மக்னா யானைக்கு ரேடியோ காலர் கருவி பொறுத்தபட்டு சீகூர் வன பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பாக விடுவிக்கபட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பரை, வாழவயல், தேவாலா உள்ளிட்ட பகுதிகளில் PM2 என்ற சுமார் 15 வயது மதிக்கதக்க மக்னா யானை ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக சுற்றித்திரிந்து வந்தது.

பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் சென்று விடும் இந்த யானை இரவு நேரங்களில் வீடு வீடாக சென்று சுவற்றை உடைத்து வீட்டிற்குள் இருக்கும் அரிசி போன்ற உணவுப் பொருட்களை எடுத்து சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தது.

இதுவரை இந்த மக்னா யானையால் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்த நிலையில், கடந்த மாதம் வாழவயல் பகுதியில் 52வயது மதிக்கதக்க பாப்பாத்தி என்ற பெண்ணின் வீட்டை தாக்கி அவரையும் கொன்றது.

இதனையடுத்து, அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று அந்த யானையை பிடித்து முதுமலை வனப்பகுதிக்குள் விட தமிழக வனத்துறை அனுமதி அளித்தது.

அதனைத் தொடர்ந்து 18 நாள் தொடர் முயற்சியின் காரணமாக நேற்று மதியம் புளியம்பரை அருகே உள்ள நீடில் ராக் வனப்பகுதியில் வைத்து மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது.

பின்னர், கும்கி யானைகளின் உதவியுடன் அந்த யானை பாதுகாப்பாக லாரியில் ஏற்றபட்டு இரவோடு இரவாக முதுமலை புலிகள் காப்பக பகுதிக்குட்பட்ட சீகூர் வன பகுதிக்கு உட்பட்ட அசுர மட்டம் வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அந்த யானையின் நடமாட்டத்தை கண்காணிக்க கழுத்தில் ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, அதிகாலையில் பத்திரமாக வனத்துக்குள் விடப்பட்டது. லாரியில் இருந்து கீழே இறங்கிய அந்த யானை நன்றாக புற்களை மேய தொடங்கியதுடன் பிளரியபடி வன பகுதிக்குள் நடந்து சென்றது.

பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த மக்னா யானையை பத்திரமாக பிடித்து வேறு பகுதியில் உள்ள வனத்துக்குள் விடுத்தவனத்துறையினருக்கு கூடலூர் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...