கோவை இசைக்கல்லூரியில் டிச.17-ல் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைப் போட்டிகள் - ஆட்சியர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மலுமிச்சம்பட்டியில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில், வரும் 17ஆம் தேதி மாவட்ட அளவிலான குரலிசை பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெறும் என அறிவிப்பு



கோவை: கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டியில் உள்ள இசைக் கல்லூரி வளாகத்தில் வரும் 17ஆம் தேதி தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட கலை போட்டிகள் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்ட சிறார்களுக்கு கலைப் பயிற்சிகள் வழங்குதல், பொதுக்கல்வியுடன் கலைக்கல்வி வழங்குதல், சிறார்களிடம் மறைந்துள்ள கலைத் திறமைகளை வெளிக்கொணர வாய்ப்பளித்தல், கலைப் போட்டிகள் நடத்துதல் மற்றும் கலையால் சிறார்களை நல்வழிப்படுத்துதல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் 1979 ஆம் ஆண்டு சென்னையில் தொடங்கப்பட்டது.

தற்போது மாநிலம் முழுவதும் 40 இடங்களில் மாவட்ட ஜவஹர் சிறுவர் மன்றங்கள், விரிவாக்க மையங்கள், ஊரக மையங்கள் என செயல்பட்டு வருகிறது. மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தேசிய சிறுவர் மன்றத்தின் நோக்கங்களை மாநில அளவில் தமிழ்நாடு ஜவஹர் சிறுவர் மன்றம் செயல்படுத்தி வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலை போட்டிகள் நடைபெறவுள்ளன. கோவை செட்டிபாளையம் பிரிவு ரோடு மலுமிச்சம்பட்டி பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள இசைக்கல்லூரி வளாகத்தில் வரும் டிசம்பர் 17 சனிக்கிழமை இந்த போட்டிகள் நடைபெறவுள்ளது.

இதில், குரலிசை பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடைபெறுகிறது. மேலும் 5-8, 9-12,13-16 என்ற வயது வரம்பில் போட்டிகள் நடைபெறும். டிசம்பர் 17 அன்று காலை 10 மணிக்கு குரலிசை போட்டி, பரதநாட்டிய போட்டி கிராமிய நடன போட்டி நடைபெறும்.

குரலிசை போட்டியில் முறையாக கர்நாடக இசை பயிலும் சிறார்கள் பங்கு பெறலாம். தமிழில் அமைந்த இசை வடிவங்கள் பாடவேண்டும். பரதநாட்டியம் மற்றும் கிராமிய நடனப் போட்டியில் அதிகபட்சமாக 3 நிமிடம் ஆட அனுமதிக்கப்படுவார்கள்.

இப்போட்டியில் சினிமா பாடல்களுக்கான நடனம் மற்றும் குழு நடனம் அனுமதி இல்லை. கிராமிய நடனப் போட்டியில் நமது பாரம்பரிய கரகம், காவடி, பொய்க்கால் குதிரை போன்ற நடனங்கள் மட்டும் ஆடப் பெற வேண்டும்.

மதியம் 2 மணிக்கு ஓவியப்போட்டி நடைபெறும். இதற்கான ஓவியத்தாள், வண்ணங்கள், தூரிகைகள் உட்பட தங்களுக்குத் தேவையானவற்றை போட்டியாளர்கள் கொண்டு வர வேண்டும். தலைப்புகள் போட்டி தொடங்கும் போது அறிவிக்கப்படும்.

பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இதில், முதல் பரிசு பெறும் சிறுவர்கள் அரசின் செலவில் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவர்.

மேலும் விவரங்களுக்கு கோயம்புத்தூர் மண்டலக் கலை பண்பாட்டு மைய அலுவலகத்தை 0422 2610290 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு கொலை வழக்கு: சிறுவன் சீர்திருத்தப் பள்ளியில் அடைப்பு; காயமடைந்த மற்றொரு குற்றவாளி மருத்துவமனையில் சிகிச்சை

கிணத்துக்கடவு அருகே இளைஞர் அஸ்வின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவன், கோவை சிறுவர் நீதிமன்றத்தி...

கற்பகம் பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்கம் நிறைவு

கோவை கற்பகம் நிகர்நிலைப்பல்கலைக்கழகத்தில் இந்திய அறிவு அமைப்பு சார்பில் திருப்புகழ் பயிற்சிப் பயிலரங்க நிறைவுவிழா நடைபெற...

கோவை கற்பகம் பொறியியல் கல்லூரி 22-வது பட்டமளிப்பு விழா: 1434 மாணவர்களுக்கு பட்டம்

கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் 22-வது பட்டமளிப்பு விழா ஆகஸ்ட் 8, 2026 அன்று நடைபெற்றது. 2025 ஆண்டு கல்வி மு...

கோவை மாநகராட்சி குடிநீர் தரத்தை உறுதி செய்ய குளோரின் அளவு ஆய்வு

கோவை மாநகராட்சி அலுவலர்கள் மேல்நிலை நீர்த்தேக்கங்கள் மற்றும் வீடுகளில் விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவுகளை நே...

கோவை மாநகராட்சி ஆணையர் வடக்கு தெற்கு மண்டல வளர்ச்சி பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் தெற்கு மண்டல பகுதிகளில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி, டெங்கு கொசு...

கோவை மாநகராட்சி ஆணையர் வளர்ச்சித் திட்டப்பணிகளை நேரில் ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா வடக்கு மற்றும் மத்திய மண்டலங்களில் பாதாள சாக்கடை, குடிநீர், மழைநீர் வடிகால் கட்டும...