கோவை மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா - ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!

மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் மலைக்கோயிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு ஏற்றப்பட்ட மகா தீபத்தை ஏராளமான பக்தர்கள் வணங்கி வழிபட்டனர்.


கோவை: கோவை மாவட்டம் மதுக்கரையில் உள்ள பிரசித்தி பெற்ற தர்மலிங்கேஸ்வரர் கோயிலில், கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு ஆண்டுதோறும் மகா தீப வழிபாடு நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா கால ஊரடங்கின் காரணமாக அரசு விதிமுறைப்படி பக்தர்கள் இல்லாமல் மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு கொரோனா கட்டுபாடுகளின்றி வழக்கமான முறையில் தர்மலிங்கேஷ்வரர் கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.



முன்னதாக கோவில் நிர்வாகிகள் பக்தர்களுடன் கோயிலை வலம் வந்து, நந்தி தேவனுக்கு முன் உள்ள கம்பத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அடிவார பகுதியில் உள்ள விநாயகர், இந்திரலிங்கம், அக்னிலிங்கம், நாக அம்மன் உள்ளிட்ட தெய்வங்களுக்கும் தீபம் ஏற்றப்பட்டது.

இறுதியாக, அபிஷேகம் மற்றும் அன்னதானம் நடைபெற்றது.



இந்த விழாவில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு மகா தீபத்தை வணங்கி வழிபட்டனர். தொடர்ச்சியாக வரும் டிசம்பர் 8ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் அன்றைய தினம் மாலை 6 மணிக்கு மூன்றாம் நாள் மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 3 நாட்கள் தொடர்ந்து மலை உச்சியில் தீபம் எரிவதற்கு பசு நெய்யை கோவிலுக்கு பக்தர்கள் வழங்கி வருகின்றனர்.

Newsletter

வி தி லீடர் ஆலோசனைக் கூட்டத்தில் 500 பேர் பங்கேற்பு

பெரியநாயக்கன்பாளையம் அருகே நடைபெற்ற வி தி லீடர் இயக்கத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று உறுப்ப...

மலுமிச்சம்பட்டி சிக்னலில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பல் பிடிப்பு

கோவை மலுமிச்சம்பட்டி சிக்னலில் பச்சிளம் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த கும்பலை இளைஞர்கள் பிடித்து போலீசார் மற்றும் குழந...

தேவனாம்பாளையம் பகுதியில் நாளை மின்தடை

தேவனாம்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், தேவனாம்பாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில்...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவருக்கு குண்டர் சட்டம்

கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீது க...

கோவையில் கள்ளச்சாராய வழக்கில் இருவர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவர் மீத...

சிறுபான்மையினர் நல விடுதிகளில் சேர ஜூலை 15 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட சிறுபான்மையினர் நல விடுதிகளில் கல்லூரி, ஐடிஐ மற்றும் பாலிடெக்னிக் மாணவர்கள் சேருவதற்கான தகுதிகள் அறிவிக்கப்ப...