ஜல்லிக்கட்டுக்கு போராட்டம் நடத்தியதற்க்கு 8 நாள் சம்பளத்தை பிடித்ததை கண்டித்து மில் தொழிலாளர்கள் போராட்டம்

கோவையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டம் நடத்திய என்.டி.சி மில் தொழிலாளர்களில் 8 நாள் ஊதியத்தை அபராதமாக பிடித்தம் செய்யபோவதாக என்.டி.சி மில் நிர்வாகம் அறிவித்ததை கண்டித்து தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.



கோவை புலியகுளம் பகுதியில் மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கீழ் பங்கஜா மில் செயல்பட்டு வருகிறது. இங்கு 400க்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். கடந்த மாதம் தமிழகம் முழுவதும் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வந்த்து. இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கடந்த 20 ஆம் தேதி பங்கஜா மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் ஒருநாள் போராட்டம் நடத்தியதற்க்கு அபராதமாக 8 நாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்து பங்கஜா மில் ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மில் வாயிலை முற்றுகையிட்டு நிர்வாகத்துக்கும் மத்திய அரசுக்கும் எதிராக முழக்கங்களை எழுப்பினர். மேலும் இந்த மாதத்துக்கான ஊதியதொகையை வழங்காமல் இழுத்தடிப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டினர். இந்தநிலை நீடித்தால் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Newsletter

பட்டாசு, இனிப்பு, கோஷங்கள்.. ! கோவையில் களைகட்டிய த.வெ.க வெற்றி விழா

தமிழக முதலமைச்சராக தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, கோவையின் பல்வேறு பகுதிகளில் த.வெ....

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...