உண்டியல் ஏலத்தை அறநிலையத்துறை தனியார் வசம் ஒப்படைத்தாக கூறி ஆட்சியர் அலுவலகத்தில் சாமியார் சங்கு ஊதி நூதன முறையில் மனு

அரசுக்கு சொந்தமான கோவிலை அறநிலையத்துறை தனியாருக்கு தாரை வார்ப்பதாக கூறி சிவனடியார் ஒருவர், கோவை ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு உதி, உடுக்கை அடித்தபடி நூதன முறையில் மனு அளித்தார்.



கோவை: கோவை மாவட்டத்தின் முக்கிய ஆன்மீக ஸ்தலமாக வெள்ளியங்கிரி மலை சிவன் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் சிறப்பு தினங்களில் லட்சக்கணக்கான மக்கள் சிவனை தரிசனம் செய்வதற்காக வருகின்றனர்.

இந்நிலையில் மலை கோவில் உண்டியல் ஏலம் மற்றும் கடைகளை தனியார் வசம் தர தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.



இந்நிலையில், இந்து அறநிலையத்துறையை கண்டித்து செந்தில் குமார் என்ற சிவனடியார், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சங்கு ஊதி, உடுக்கை அடித்து நூதனமான முறையில் மனு அளித்துள்ளார்.



அவரது மனுவில் அறநிலையத்துறை, உயர்நீதிமன்ற தீர்ப்பை அரசு அவமதித்தாகவும், அரசுக்கு சொந்தமான கோவிலை தனியாருக்கு தாரை வார்ப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...